https://republictn.com/

அரசியல்

மாறாத திமுக விசுவாசம்..! டம்மியாக்கப்பட்ட அருண் ஐபிஎஸ்..! முன்பே சொன்ன #Republic தமிழ்நாடு..!
மாறாத திமுக விசுவாசம்..! டம்மியாக்கப்பட்ட அருண் ஐபிஎஸ்..! முன்பே சொன்ன #Republic தமிழ்நாடு..!
விஜய்க்கு எதிராக மாஸ்டர் பிளான்..? களத்தில் இறங்கிய பாஜக? திமுக-அதிமுகவின் அதிரடி வியூகம்..!
விஜய்க்கு எதிராக மாஸ்டர் பிளான்..? களத்தில் இறங்கிய பாஜக? திமுக-அதிமுகவின் அதிரடி வியூகம்..!
த.வெ.க.வை கைப்பற்ற ஆதவ் அர்ஜுனா மெகா பிளான்..? அடுத்த குறி CM நாற்காலியா..? ஆதவின் மெகா ஸ்கெட்ச்..!
த.வெ.க.வை கைப்பற்ற ஆதவ் அர்ஜுனா மெகா பிளான்..? அடுத்த குறி CM நாற்காலியா..? ஆதவின் மெகா ஸ்கெட்ச்..!
எனக்கு இந்தப் பதவியே வேண்டாம்.. விஜய் எடுத்த விபரீத முடிவு… இதுக்கா சார் உங்களுக்கு ஓட்டுப்போட்டாங்க..! கெஞ்சும் அதிகாரிகள்..!
எனக்கு இந்தப் பதவியே வேண்டாம்.. விஜய் எடுத்த விபரீத முடிவு… இதுக்கா சார் உங்களுக்கு ஓட்டுப்போட்டாங்க..! கெஞ்சும் அதிகாரிகள்..!
லயோலா மணிக்கு யாருமே எதிர்பாரா பவர்ஃபுல் அரசு பதவி..! CM விஜய் அதிரடி உத்தரவு
லயோலா மணிக்கு யாருமே எதிர்பாரா பவர்ஃபுல் அரசு பதவி..! CM விஜய் அதிரடி உத்தரவு
திமுகவுக்கு தில் இருக்கா..? மு.க.ஸ்டாலினுக்கு துரை வைகோ சவால்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!
திமுகவுக்கு தில் இருக்கா..? மு.க.ஸ்டாலினுக்கு துரை வைகோ சவால்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!
அதிமுகவில் இருந்து ‘மேலும்’ 4 எம்.எல்.ஏ-க்கள் அவுட்..? ஆனாலும், விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை!
அதிமுகவில் இருந்து ‘மேலும்’ 4 எம்.எல்.ஏ-க்கள் அவுட்..? ஆனாலும், விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை!
விஜய்யின் மெகா ஸ்கெட்ச்… கூட்டணியை கழட்டிவிட தவெக மாஸ்டர் பிளான்? 10 அதிமுக எம்.எல்.ஏ-க்களால் வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய்யின் மெகா ஸ்கெட்ச்… கூட்டணியை கழட்டிவிட தவெக மாஸ்டர் பிளான்? 10 அதிமுக எம்.எல்.ஏ-க்களால் வரப்போகும் ட்விஸ்ட்!
40 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் அதிசயம்..! இன்னும் 6 இடங்கள் மட்டுமே… வரலாறு படைக்கப் போகும் மோடி
40 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் அதிசயம்..! இன்னும் 6 இடங்கள் மட்டுமே… வரலாறு படைக்கப் போகும் மோடி
விஜய் அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! பசு வதை தடைக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை!
விஜய் அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! பசு வதை தடைக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை!

லைஃப் ஸ்டைல்

இந்தியா

குலுங்கிய வீடுகள்.. அலறி அடித்து ஓடிய மக்கள்! ஆந்திராவை உலுக்கிய அதிகாலை நிலநடுக்கம்..
குலுங்கிய வீடுகள்.. அலறி அடித்து ஓடிய மக்கள்! ஆந்திராவை உலுக்கிய அதிகாலை நிலநடுக்கம்..
Eswari Jul 13, 2026 at 1:06 pm No Comments

வங்கக் கடலில் ஏற்பட்ட 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology – NCS) வெளியிட்ட தகவலின்படி, 2026 ஜூலை 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.05 மணியளவில் வங்கக் கடலில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையம் காக்கிநாடா கடற்கரையிலிருந்து சுமார் 225 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் அமைந்திருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் உணரப்பட்டன. குறிப்பாக விசாகப்பட்டினம் நகரின் எம்.வி.பி. காலனி, பெடவால்டெய்ர், காஜுவாகா, யெந்தாடா, அரிலோவா, சாகர் நகர், மங்களப்பாளம், அப்புகார் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.

அதுமட்டுமின்றி, அனகாப்பள்ளி, விஜயநகரம், காக்கிநாடா மற்றும் கோனசீமா உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசான நில அதிர்வுகள் பதிவாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை நேரத்தில் திடீரென நிலம் அதிர்ந்ததை உணர்ந்த பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளிலும் திறந்தவெளிப் பகுதிகளிலும் தஞ்சமடைந்தனர். இதனால் சில பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, காயம் அல்லது கட்டிடங்களுக்கு பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பகுதி நில அதிர்வு அபாயம் குறைவாக உள்ள நிலையான புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் ஏற்பட்ட இந்த 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகள் வரை உணரப்பட்டதால், அதிகாலை நேரத்தில் மக்கள் மத்தியில் சிறிது நேரம் அச்சமும் பரபரப்பும் நிலவியது. இருப்பினும், எந்தவித உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.

“2029-ல் ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ உறுதி? ₹7 லட்சம் கோடி மிச்சம்.. நாடாளுமன்றக் குழுவின் மாஸ் அப்டேட்!”
“2029-ல் ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ உறுதி? ₹7 லட்சம் கோடி மிச்சம்.. நாடாளுமன்றக் குழுவின் மாஸ் அப்டேட்!”
“ஆந்திராவை அதிரவைத்த கொரோனா: அலர்ட் மோடில் சுகாதாரத்துறை.. உடனே வெளியான அவசர உத்தரவு!
“ஆந்திராவை அதிரவைத்த கொரோனா: அலர்ட் மோடில் சுகாதாரத்துறை.. உடனே வெளியான அவசர உத்தரவு!
அரசு விழாக்களில் மாநிலப் பாடல்களுக்கே முதலிடம்! மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அதிரடி உத்தரவு!”
அரசு விழாக்களில் மாநிலப் பாடல்களுக்கே முதலிடம்! மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அதிரடி உத்தரவு!”

தமிழ்நாடு

“கஞ்சா விற்றால் பதவியா? தட்டிக்கேட்டால் நீக்கமா? கஞ்சா மாஃபியாவை மறைக்கிறதா கல்வித்துறை?
“கஞ்சா விற்றால் பதவியா? தட்டிக்கேட்டால் நீக்கமா? கஞ்சா மாஃபியாவை மறைக்கிறதா கல்வித்துறை?
Eswari Jul 14, 2026 at 10:16 am No Comments

திருப்பூர் மாவட்டம், கொங்குமை ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பைகள் சோதனை செய்யப்பட்டபோது, ஒரு மாணவரிடமிருந்து கால் கிலோ கஞ்சா பொட்டலம், கஞ்சா சிகரெட்டுகள் மற்றும் சக மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்து பெற்றதாகக் கூறப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல் அந்த கஞ்சாவை தீயிட்டு எரித்து ஆதாரங்களை அழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் போதைப்பொருள் புழக்கத்தை மூடிமறைக்க முயன்றதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராக இருந்த சகாயமேரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்து கவனத்தை ஈர்த்தார்.

மாணவர்களின் நலன் கருதி கஞ்சா புழக்கம் குறித்து தொடர்ந்து புகார் அளித்த போதிலும், கல்வித்துறையும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாறாக புகார் அளித்த ஒரே காரணத்திற்காக தன்னை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விதிமுறைகளுக்குப் புறம்பாக நீக்கியுள்ளதாக சகாயமேரி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான இந்த விவகாரத்தில், புகார் அளித்தவர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் கஞ்சா பயன்பாடு இருப்பதாக தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கொங்குமை ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் இருப்பதாகவும், அதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சகாயமேரி மனு அளித்திருந்தார்.

இந்த மனுவின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த மே 20-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 55 நாட்கள் கடந்தும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சகாயமேரி எந்தவித முன்அறிவிப்போ, விளக்கமோ, விசாரணையோ இன்றி நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த சகாயமேரி, “நான் உயிருடன் இருக்கும்போதே, எந்த அடிப்படையில் எனது பதவி காலியாக அறிவிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சகாயமேரி, “மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி அவர்களின் எதிர்காலம் சீரழியக் கூடாது என்பதற்காகவே நான் போராடி வருகிறேன். பள்ளியில் நடந்த கஞ்சா விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்காகவே என்னை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டனர்.

என்னை நீக்குவதற்கு முன்பு எந்தவித அறிவிப்போ, விளக்கமோ, விசாரணையோ நடத்தப்படவில்லை. முறையான உத்தரவும் வழங்கப்படவில்லை. நான் உயிருடன் இருக்கும்போது, எந்த அடிப்படையில் எனது பதவி காலியாக அறிவிக்கப்பட்டது? எனது மரணச் சான்றிதழோ அல்லது வேறு ஏதேனும் ஆதாரமோ இருந்ததா? எனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் முறையிட்டுள்ளேன். இரண்டு நாட்களுக்குள் உரிய பதிலும் நடவடிக்கையும் கிடைக்கவில்லை என்றால், எனது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

“3 நிமிடத்தில் முடிந்த 15 உயிர்கள்.. வியட்நாமில் அலற வைத்த கொடூர விபத்து! பிறந்தநாளே மரண நாளான துயரம்!”
“3 நிமிடத்தில் முடிந்த 15 உயிர்கள்.. வியட்நாமில் அலற வைத்த கொடூர விபத்து! பிறந்தநாளே மரண நாளான துயரம்!”
விட்டதை பிடிக்க திருட்டு வேட்டை..! ஆன்லைன் சூதாட்ட வெறி.. பட்டதாரி இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!
விட்டதை பிடிக்க திருட்டு வேட்டை..! ஆன்லைன் சூதாட்ட வெறி.. பட்டதாரி இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!
”ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 7 மாதங்களுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!
”ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 7 மாதங்களுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!

ஸ்போர்ட்ஸ்

45 வயதில் புதிய அவதாரம்! சிஎஸ்கே-வில் தல தோனிக்கு காத்திருக்கும் மாபெரும் பொறுப்பு..! ரசிகர்கள் உற்சாகம்..!

R.M.Thiraviaraj Jul 13, 2026 at 12:30 pm No Comments

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் நீண்டகால கூட்டணிகளில் ஒன்று இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். ஐபிஎல் தொடரில் சென்னை…

’’பிரபல கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் மர்ம மரணம்!

Eswari Jul 12, 2026 at 8:19 pm No Comments

தென் ஆப்பிரிக்க தேசிய கால்பந்து அணி (Bafana Bafana) மற்றும் மாமிலோடி சண்டவுன்ஸ் (Mamelodi Sundowns) கிளப் அணியின் நடுகள (Midfielder) வீரரான 25 வயதான ஜெய்டன் ஆடம்ஸ், 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தனது நாட்டுக்காக விளையாடிய பின்னர்…

இங்கிலாந்தில் அதிரடி காட்டும் பிசிசிஐ! இரண்டாகப் பிரிந்த இந்திய அணி.. பின்னணி என்ன?

K.M.Viji Jul 10, 2026 at 7:26 pm No Comments

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணியின் முகாமில் இருந்து ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி, ஜூலை 11 அன்று…

0,0,0,0,0,0… உறைந்து போன இங்கிலாந்து பேட்ஸ்மேன்.. அர்ஷ்தீப் சிங்கின் மாயாஜால ஓவர்!

R.M.Thiraviaraj Jul 7, 2026 at 11:05 pm No Comments

நாட்டிங்ஹாமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது ஸ்விங், துல்லியமான பந்துவீச்சால் வரலாறு படைத்தார். இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ்…

தப்பு பண்றீனங்க கம்பீர்..! 15 வயது சிறுவனுக்காக சஞ்சு சாம்சன் நீக்கமா..? இந்திய அணியை வெளுத்து வாங்கிய அஸ்வின்..!

R.M.Thiraviaraj Jul 6, 2026 at 4:21 pm 2 Comments

2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்தியாவை வழிநடத்திய நட்சத்திர பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். உலகக் கோப்பை வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்திய…