அரசியல்
லைஃப் ஸ்டைல்
இந்தியா
“20 ஆண்டுகளுக்குப் பின் விழுந்த பலத்த அடி! இந்திய மாம்பழங்களை நிராகரித்தது ஜப்பான்!”
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் திடீர் தடைவிதித்துள்ளதால், விவசாயிகளின் வருவாய் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்கள், ஜப்பான் நாட்டின் சுகாதார விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவில்லை எனக் கூறி, அந்நாட்டு அரசு இந்த தடையை விதித்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டிற்கு பிறகு, சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஜப்பான் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, இந்திய மாம்பழ விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு அனுப்பப்படும் அனைத்து பழங்களும் “வேப்பர் ஹீட் ட்ரீட்மென்ட்” எனப்படும் ஆவி வெப்ப சுத்திகரிப்பு முறையின் மூலம் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பது ஜப்பான் பின்பற்றும் முக்கிய விதிமுறையாகும்.
இந்த சுத்திகரிப்பு பணிகளை, ஜப்பான் நாட்டு அதிகாரிகள் நேரில் கண்காணித்து, இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளில் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட ஆலைகளில், இந்த சுத்திகரிப்பு முறைக்கான கட்டமைப்புகள் முறையாக செயல்படவில்லை என ஜப்பான் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து, இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு ஜப்பான் முழுமையான தடைவிதித்துள்ளது.
ஜப்பானின் இந்த முடிவால், மாம்பழ விவசாயிகளின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு
சம்பளம் தராததால் ஆத்திரம்..! ஜேசிபி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய தொழிலாளி..!
புதுச்சேரியில் சம்பளம் தர மறுத்த உரிமையாளருக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், அனுமந்தையை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்த வாகனங்களை லாஸ்பேட்டை- கிழக்கு கடற்கரை சாலையில் காலி நிலத்தில் நிறுத்துவது வழக்கம். அப்படி நிறுத்தி இருந்த நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் நாட்டு வெடிகுண்டை இயந்திரத்தின் மீது வீசி விட்டு ஓடியுள்ளார்.
பயங்கர சத்தத்துடன் அது வெடிக்க அக்கம் பக்கத்தினர் பயந்து லாஸ்பேட்டை காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அடுத்த சில நொடிகளில் தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் சில தொழிலாளர்களுக்கு ஜேசிபி உரிமையாளர் சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒரு தொழிலாளி நாட்டு வெடி குண்டுவீசி மிரட்டதாக தெரிய வந்துள்ளது.
-சக்திவேல்- சிறப்பு நிருபர், புதுச்சேரி.
சினிமா
ஸ்போர்ட்ஸ்
டி20 உலகக்கோப்பையில் பகீர் சதி! இந்தியாவுக்கு எதிராக புகுந்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ… அம்பலமான ஆதாரம்!
வட அமெரிக்க விளையாட்டுத்துறையையே அதிரவைக்கும் ஒரு இமாலயச் சதி அம்பலமாகி உள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, தெருக் கும்பல்கள், மேட்ச் ஃபிக்சிங் கூட்டாளிகள் இணைந்து ‘கிரிக்கெட் கனடா’ அமைப்பையே முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. இது வெறும்…
சர்வதேச செஸ் போட்டியில் சாதித்த இன்ஸ்பெக்டர் மகள்: 2 பதக்கங்கள் வென்று அசத்தல்..!
இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார். இலங்கையில் நடந்த சர்வதேசப் போட்டிஇலங்கையில் கடந்த மே 14, 2026 அன்று…
டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ்..? மாபெரும் பெரிய தவறைச் செய்யப் போகும் இந்திய அணி..?
சூர்யகுமார் யாதவின் தலைமையில் இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையை வென்றது, ஆனால் அந்தத் தொடரில் அவரது செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரிலும் சூர்யாவின் பேட்டிங் சிறப்பாகச் செயல்படவில்லை. தற்போது, சூர்யகுமார் யாதவ் தனது…
மழை பெய்தால் ராஜஸ்தான் காலி.. ஹைதராபாத்துக்கு ஜாக்பாட்! எலிமினேட்டர் போட்டியின் ‘விசித்திர’ விதி என்ன?
ஐபிஎல் 2026 தற்போது ஒரு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி, மே 27 ஆம் தேதி முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இரவு 7:30 மணிக்குத்…
தந்தை–மகன் பாசம்! அர்ஜுனை பாராட்டி சச்சின் சொன்ன உணர்ச்சி வார்த்தைகள்
கிரிக்கெட் ஒருவரது திறமையை எவ்வளவு சோதிக்கிறதோ, அதே அளவுக்கு அவரின் பொறுமையையும் சோதிக்கும் என மகன் அர்ஜுன் டெண்டுல்கரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். நடந்து வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இடம் பெற்றிருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர்,…
Recent Posts
- சம்பளம் தராததால் ஆத்திரம்..! ஜேசிபி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய தொழிலாளி..!
- ரூ. 1500 கோடி ஹைதராபாத் நில மோசடி.. வசமாக சிக்கிய முன்னாள் எம்.எல்.ஏ..!
- தாயின் நினைவாக 6.5 லட்சம் மரங்கள்: நிஜ வாழ்க்கையில் ‘ஹீரோ’ ஆன நடிகர் சாயாஜி ஷிண்டே!
- “வீட்டிலிருந்தபடியே அரசு சேவைகள்… ஒரு ‘Hi’ போதும்! இனி ‘நம்ம அரசு நம் கையில்!’
- டி20 உலகக்கோப்பையில் பகீர் சதி! இந்தியாவுக்கு எதிராக புகுந்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ… அம்பலமான ஆதாரம்!
