Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான 60-வது ஞானபீட விருது (2025-ஆம் ஆண்டிற்கான) வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஞானபீட விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

புது தில்லியில் நடைபெற்ற 60-வது ஞானபீட விருது வழங்கும் விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் கரண் சிங், கவிஞர் வைரமுத்துவுக்கு இந்த உயரிய விருதை வழங்கி கௌரவித்தார். சிறப்பம்சமாக, அவரது பிறந்தநாளான ஜூலை 13, 2026 அன்று இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுடன் ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் வாக்தேவி (சரஸ்வதி) வெண்கலச் சிலை ஆகியவையும் வழங்கப்பட்டன.

இதற்கு முன்பு, அகிலன் 1975-ஆம் ஆண்டிலும், ஜெயகாந்தன் 2002-ஆம் ஆண்டிலும் ஞானபீட விருதைப் பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உயரிய விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் எழுத்தாளராக வைரமுத்து இடம்பிடித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட உலகில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து, 7 முறை தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், அவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக 2003-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருதும் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்க  "மமிதா மாதம்!" - 'ஜனநாயகன்' மகளைக் கட்டிப்பிடித்துப் பாராட்டிய கீர்த்தி சுரேஷ்!

இலக்கியம் மற்றும் கலைத்துறைக்கான அவரது சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் ஆகிய உயரிய குடிமக்கள் விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளது.

விருது வழங்கும் விழாவில் பேசிய வைரமுத்து, “இந்தியாவின் இந்த உயரிய இலக்கிய விருதை ஒவ்வொரு தமிழரும் கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழர்கள் தங்கள் வீடுகளிலும், குழந்தைகளிடமும் தாய்மொழியான தமிழிலேயே பேச வேண்டும்” என்று உருக்கமான வேண்டுகோளையும் விடுத்தார்.

இந்த உயரிய அங்கீகாரம், தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த பெருமையாக இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் தமிழர்கள் பலரும் வரவேற்று வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago