தென் ஆப்பிரிக்க தேசிய கால்பந்து அணி (Bafana Bafana) மற்றும் மாமிலோடி சண்டவுன்ஸ் (Mamelodi Sundowns) கிளப் அணியின் நடுகள (Midfielder) வீரரான 25 வயதான ஜெய்டன் ஆடம்ஸ், 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தனது நாட்டுக்காக விளையாடிய பின்னர் சில வாரங்களுக்கு முன்பு சொந்த நாடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், கேப் டவுன் நகரின் மத்திய பகுதியில் உள்ள அவரது குடியிருப்பு வீட்டில், சனிக்கிழமை காலை ஜெய்டன் ஆடம்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவரது திடீர் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உயிரிழப்பு கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வெஸ்டர்ன் கேப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்டன் ஆடம்ஸின் மறைவுக்கு தென் ஆப்பிரிக்க விளையாட்டுத் துறை அமைச்சர் கேடன் மெக்கென்சி, ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ மற்றும் உலக கால்பந்து அமைப்புகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன. மேலும், உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போதும் அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நடப்பு 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்றில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் ஜெய்டன் ஆடம்ஸ் சிறப்பாக விளையாடினார். தென் ஆப்பிரிக்க அணி தனது வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் அவரது நடுகள ஆட்டம் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
25 வயதிலேயே ஜெய்டன் ஆடம்ஸ் உயிரிழந்த சம்பவம், தென் ஆப்பிரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
