Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முன்னாள் முன்னணி நடிகையும், நடிகர் அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித் குமார், தான் மீண்டும் திரையில் தோன்றவுள்ளதாக பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “எனக்கு அந்த எண்ணம் அறவே இல்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் அஜித் குமார் நடிக்கும் ‘டேர்டெவில்’ திரைப்படத்தில், ஷாலினி ஒரு சிறிய கதாபாத்திரத்தில், அதாவது Cameo ரோலில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் இணையத்தில் செய்திகள் பரவின. இதனால், ‘அமர்க்களம்’ படத்தில் இணைந்து நடித்த அஜித் – ஷாலினி ஜோடியை மீண்டும் திரையில் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால், இந்தத் தகவலை ஷாலினி தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் மீண்டும் கேமரா முன்பு வந்து நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், நடிப்பில் மீண்டும் களமிறங்கப் போவதில்லை என்றும் ஷாலினி தெளிவுபடுத்தியுள்ளார்.

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, அஜித் குமாரை வைத்து ‘டேர்டெவில்’ திரைப்படத்தை இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தில் அஜித் மற்றும் ஷாலினி இருவரையும் மீண்டும் திரையில் இணைத்தால், அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என இயக்குநர் கருதியதாகக் கூறப்படுகிறது.

Republic Tamil

இதற்காக, ஷாலினியிடம் ஒரு முக்கிய விருந்தினர் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு ஆதிக் ரவிச்சந்திரன் நேரடியாகப் பேசி சம்மதிக்க வைக்க முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், “அந்தப் பேச்சுக்கே இடமில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மீண்டும் கேமரா முன்னால் வந்து நடிக்கும் எண்ணம் எனக்கு அறவே இல்லை” என்று ஷாலினி திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  ’அப்படியேதான் இருக்காரு…’ முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து சினேகா பகிர்ந்த எமோஷனல் பதிவு!"

திருமணத்திற்குப் பிறகு முழுமையாகக் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் ஷாலினி, தற்போது தனது புதிய தயாரிப்பு நிறுவனப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாகவே நடிப்புக்கான வாய்ப்பை அவர் மென்மையாக மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாலினி அஜித் குமார் இறுதியாகக் கதாநாயகியாக நடித்துத் திரைக்கு வந்த திரைப்படம் ‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப்படமாகும். 2001-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அவர் நடிகர் பிரசாந்துடன் இணைந்து நடித்திருந்தார். அதற்கு முன்பாக, அஜித்துடன் இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

‘அலைபாயுதே’ மற்றும் ‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப்படங்களுக்குப் பிறகு, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடிப்புக்கு விடை கொடுத்த ஷாலினி, அதன் பின்னர் எந்தவொரு திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் கூட நடிக்கவில்லை. அஜித்துடன் காதல் வயப்பட்டு திருமண வாழ்க்கைக்குத் தயாரான 2001-ஆம் ஆண்டிலேயே, இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும், குடும்பத் தலைவியாக அஜித்துக்குப் பக்கபலமாக இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அப்போது எடுத்த அந்த முடிவில் அவர் இன்றுவரை உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "மோகன்லாலிடம் பேரம்... கடைசியில் என்னது இப்படியாகிடுச்சே? அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் நடந்த ட்விஸ்ட்!"

இதற்கிடையே, திரையில் நடிக்காவிட்டாலும் ‘டேர்டெவில்’ திரைப்படத்தின் மூலம் ஷாலினி தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இப்படம் அவரது சொந்த நிறுவனமான ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாகிறது. நிறுவனத்தின் தயாரிப்பு பணிகளை ஷாலினியே முன்னின்று கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அஜித்தின் சுமார் 35 ஆண்டுகால திரைப்பயணத்தில் முதன்முறையாக அவரது திரைப்படத்தை ஷாலினியே தயாரிக்கும் நிலை உருவாகியுள்ளது. திரையில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்தாலும், திரைக்குப் பின்னால் அவரது திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் ஷாலினி முக்கியப் பங்காற்றி வருகிறார்.

Republic Tamil

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குமார், தனது திரைப்பயணம் மற்றும் பந்தய வாழ்க்கையின் வெற்றிக்கு ஷாலினி முக்கியக் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். “நான் வாழ்வதற்கு அவ்வளவு எளிதான மனிதன் அல்ல. என் வாழ்வில் நான் எடுத்த தவறான முடிவுகளின்போதும், 29 அறுவை சிகிச்சைகளின்போதும் அவர் எனக்குப் பெரும் தூணாக நின்றார்” என்று ஷாலினியின் அர்ப்பணிப்பைப் பாராட்டியிருந்தார்.

அஜித்தின் 64-வது படமாக உருவாகி வரும் ‘டேர்டெவில்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ‘டைஸ்’ மற்றும் ‘ஃபேஸ் தி ஃபியர்’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. நிஜ வாழ்க்கையில் அஜித்துக்கு இருக்கும் கார் மற்றும் பைக் பந்தய ஆர்வம், அதேபோல் ரிஸ்க் எடுக்கும் அவரது குணம் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் தலைப்பும் கதைக்களமும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "தோத்துறக் கூடாதுன்னு நினைச்சேன், ஆனா… 'அஞ்சான்' ட்ரோல்களும் விஜய் படம் மிஸ்ஸான வலியும்: லிங்குசாமி ஓப்பன் டாக்!"

அஜித் பங்கேற்ற சர்வதேச கார் பந்தயங்களின்போதும் ஷாலினி அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்துள்ளார். திருமணமான ஆரம்பக் காலத்தில், குறிப்பாக 2002-ஆம் ஆண்டுகளில் அஜித் பங்கேற்ற சர்வதேச கார் பந்தயங்களுக்கு ஷாலினி நேரில் சென்று அவருடன் தங்கியிருந்து உற்சாகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தற்போது, அவர்களது மகன் ஆத்விக்கும் கோ-கார்ட்டிங் பந்தயங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், குடும்பத்திலும் பந்தய உலகத்திலும் அஜித்தின் ஆர்வத்திற்கு ஷாலினி தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

திரையில் நடிக்காவிட்டாலும், அஜித்தின் நிஜ வாழ்க்கையிலும், தற்போது தயாரிப்பாளராக அவரது திரைப்பயணத்தின் பின்னணியிலும் ஷாலினி முக்கியப் பங்காற்றி வருகிறார். இதனால், அவர் அஜித்தின் வாழ்க்கையின் உண்மையான ‘ஹீரோயின்’ என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அன்புடன் கொண்டாடி வருகின்றனர்.

‘டேர்டெவில்’ திரைப்படத்தில் ஷாலினி நடிக்கப் போவதாக பரவிய வதந்திக்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தயாரிப்பாளராக அவர் எடுத்துள்ள புதிய அவதாரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 seconds ago at 20 seconds ago