https://republictn.com/

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து பெருமளவில் குறைந்து, வினாடிக்கு 300 கன அடியாக சரிந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஓரளவு நீர்வரத்து இருந்து வந்த நிலையில், தற்போது தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதால் ஒகேனக்கல் பகுதியில் கவலை நிலவுகிறது.

தமிழகத்தின் காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த வாரம் வரை பரவலாகப் பெய்து வந்த கனமழை தற்போது முற்றிலும் குறைந்துள்ளது. அதேபோல், காவிரி ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான பிரம்மகிரி மலைத் தொடரிலும் தென்மேற்கு பருவமழை இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு தீவிரமடையவில்லை.

பருவமழை போதிய அளவில் பெய்யாததால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (KRS) உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கான நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் காவிரி நீரின் அளவும் கணிசமாகச் சரிந்துள்ளது.

தற்போது ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடியாக மட்டுமே உள்ளதால், அங்குள்ள முக்கிய அருவிகளில் தண்ணீர் மெலிதாகவே கொட்டுகிறது.

இதனால் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பரிசல் சவாரி உள்ளிட்ட சுற்றுலாவைச் சார்ந்த வாழ்வாதாரத் தொழில்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் மட்டுமே நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago