முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தவெக தலைவராகத் தனது நிர்வாகத் திறமையையும் அரசியல் முதிர்ச்சியையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். அவரது அரசியல் பயணம் நாளுக்கு நாள் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அவரது ஜனநாயகன் திரைப்படமும் அதற்கு இணையாக ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
அரசியல், சினிமா என இருவேறு தளங்களிலும் சமகாலத்தில் பயணிக்க வேண்டிய சூழலில், விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள், விளம்பரப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் அவரது படம் என்பதால், ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமும் பெரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதே வேளையில் விஜய்யின் அரசியல் எதிர்ப்பாளர்களும், விமர்சகர்களும் இந்தத் திரைப்பட வெளியீட்டை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி அவதூறு பரப்புவதற்கான சரியான வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
சினிமா வட்டாரங்களில் வழக்கமாக நடக்கும் சில முறைகேடுகள், தற்போது முதலமைச்சர் நாற்காலியில் இருக்கும் விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக, ‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீட்டின்போது திரையரங்குகளில் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதோ, அல்லது அரசு அனுமதித்த விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதோ போன்ற சம்பவங்கள் நடந்தால், அது உடனடியாக விஸ்வரூபம் எடுக்கும். விஜய் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி திரையரங்கு உரிமையாளர்களுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார் என்றும், இது ஒரு வகையான அதிகார துஷ்பிரயோகம், ஊழல் என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தக் கூடும்.
இந்த விவகாரத்தில் இருக்கும் அரசியல் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்துள்ள முதலமைச்சர் விஜய், நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க அதிரடியான கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தயார் செய்து வருவதாகத் தெரிகிறது. திரையரங்குகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிகாரிகளுக்கு அவர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தியேட்டர்களில் திடீர் சோதனைகளை நடத்துமாறும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ஒரு ரூபாய் அதிகமாக வைத்து டிக்கெட் விற்பனை செய்தது கண்டறியப்பட்டால் கூட, சம்பந்தப்பட்ட திரையரங்கின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜய்யின் தீவிர அரசியல் எதிர்ப்பாளர்களும், திமுக ஆதரவாளர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரும் அவர் நிர்வாக ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ செய்யும் ஒரு சிறிய தவறுக்காகவும் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள். கிடைக்கும் எந்தவொரு சிறு வாய்ப்பையும் பெரிய அரசியல் விவாதமாக மாற்ற அவர்கள் துடித்துக்கொண்டிருக்கும் சூழலில், விஜய் இந்த விஷயத்தில் அசாத்திய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் வணிக ரீதியாகப் பெறும் வெற்றியைத் தாண்டி, டிக்கெட் விலை தொடர்பான எந்தவொரு சிறு புகாரும் முதலமைச்சராக இருக்கும் விஜய்யின் அரசியல் இமேஜை நேரடியாகப் பாதித்து, பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான பார்வையை உருவாக்கிவிடும்.
எனவே, திரைப்பட வெளியீடு தொடர்பான அனைத்து சட்டப்பூர்வ அம்சங்களையும், திரையரங்கு விநியோக முறைகளையும் துல்லியமாக மேற்பார்வையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையில் முதலமைச்சர் விஜய்க்கு எந்தவிதமான அவப்பெயரோ, எதிர்மறையான விமர்சனங்களோ அல்லது அரசியல் ரீதியான பின்னடைவுகளோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய முழுப் பொறுப்பும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘கேவிஎன் புரொடக்ஷன்ஸ்’ வசம் உள்ளது. சினிமாவுக்கும், அரசியலுக்கும் இடைப்பட்ட இந்த கத்தி மேல் நடக்கும் பயணத்தில், விஜய்க்கு ‘ஜன நாயகன்’ திரைப்படம் உள்ளது.
