Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

வெளியில் “பகையை மறந்து பங்காளிகளாகி விட்டோம்” என்று கை குலுக்கிக் கொண்டாலும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையிலான உட்கட்சி அரசியல் பகை இன்னும் தணியவில்லை என்பதை தர்மபுரி இணைப்பு விழா வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துவிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு மூண்ட அதிகாரப் போட்டி, இன்றளவும் இரு தலைவர்களுக்கும் இடையே தணியாத நெருப்பாகவே புகைந்துகொண்டிருக்கிறது.

நடந்து முடிந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போதிலும், வெற்றி வாய்ப்பை இழந்த விரக்தியில் இரு முகாம்களும் மீண்டும் தங்களின் அரசியல் சதுரங்க ஆட்டத்தைத் தொடங்கியுள்ளன. தேர்தல் தோல்விக்குப் பின், அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் அதிருப்தி அலை வீசத் தொடங்கியது. தினகரனை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தினகரன், வெளியில் அமைதி காப்பது போல நடித்தாலும், பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தென்மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்த நடத்தி, அக் கட்சியின் அடித்தளத்தையே ஆட்டங்காண வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

இதையும் படியுங்க  என்னங்க இப்படி பண்ணிட்டாரு..! EPS-சிடமிருந்து வந்த உத்தரவு - அலறும் அதிமுகவினர்..!

தினகரனின் இந்த மறைமுகத் தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு தந்த அதிரடி பதிலடிதான் தர்மபுரியில் நடைபெற்ற பிரம்மாண்ட இணைப்பு விழா! அ.ம.மு.க நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைக்கும் விழாவை மிக விமரிசையாக நடத்தி, தினகரனுக்கு பலத்த அரசியல் செக் வைத்துள்ளார் பழனிசாமி. “நீ தென் மாவட்ட நிர்வாகிகளை இழுத்தால், நான் உன் வட மாவட்ட பலத்தையே காலி செய்வேன்” என்பது போல அமைந்தது இந்த நடவடிக்கை.

இத்துடன் நிறுத்தாமல், அடுத்தகட்டமாக அ.ம.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் தென் மாவட்ட நிர்வாகிகளையும் அ.தி.மு.க பக்கத்திற்குத் தூக்குவதற்கு பழனிசாமி தரப்பு ரகசிய வியூகம் வகுத்து வருகிறது.

முன்னாள் அமைச்சர்களின் அதிருப்தி, தென்மாவட்ட நிர்வாகிகளின் ரகசிய நகர்வுகள், தினகரனின் மறைமுக வியூகம் எனக் ஏற்கனவே உட்கட்சிப் பூசல்களால் அ.தி.மு.க தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த ‘ஆள் தூக்கும்’ படலம் இரு கட்சிகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இது குறித்து, அ.தி.மு.க., அமைப்பு செயலர்கள் சிலர் கூறுகையில் ஜெயலலிதா மறைவுக்கு பின், அப்போதைய முதல்வர் பழனிசாமிக்கும், அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக இருந்த தினகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அ.தி.மு.க.,வில் இருந்து தினகரன் நீக்கப்பட்டார். அ.ம.மு.க., கட்சியை தினகரன் ஆரம்பித்தார்.

இதையும் படியுங்க  அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா..? எஸ்.பி.வேலுமணி மீது இபிஎஸ் ஆவேசம்..!

சட்டசபை தேர்தலில், பல ஆண்டு பகை முடிவுக்கு வந்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும், ‘பகையை மறந்து பங்காளியாகி விட்டோம்’ என அறிவித்தனர். எனினும், தேர்தலில் அ.தி.மு.க., – அ.ம.மு.க., கூட்டணி, எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வில் பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் தலைமையில் அதிருப்தி அணி உருவானது. தினகரனை, அ.தி.மு.க.,வில் இணைக்குமாறு கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனால், ‘அது அவசியமற்றது’ என, தினகரன் வெளியில் கூறினாலும், பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும், தென்மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுடன், ரகசியமாக பேசி வருகிறார்.

இந்நிலையில், அ.ம.மு.க., நிர்வாகிகளை, அ.தி.மு.க.,வில் இணைக்கும் நிகழ்ச்சி, தர்மபுரியில் நேற்று முன்தினம் மிக விமரிசையாக நடத்தப்பட்டது. வெளியில் பங்காளிகளாக காட்டி கொண்டாலும், பழனிசாமி – தினகரன் இடையிலான பகை, இன்னும் புகைந்து கொண்டு இருக்கிறது.

அதனால் தான், தென் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் தினகரன் பேச்சு நடத்தினார். பதிலுக்கு வட மாவட்ட அ.ம.மு.க., நிர்வாகிகளை அ.தி.மு.க.,விற்கு பழனிசாமி இழுத்துள்ளார். தென் மாவட்ட அ.ம.மு.க., நிர்வாகிகளை இழுக்கவும் பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. உட்கட்சி பூசலால், அ.தி.மு.க., கதி கலங்கி நிற்கும் சூழலில், தினகரன் உடனான மோதல், எப்படி முடியும் என தெரியவில்லை” எனக் கூறுகின்றனர்.

இதையும் படியுங்க  ரூ- 300 கோடி வாங்கிய எடப்பாடி..! தமிழகத்தில் லாட்டரியை இறக்க டீல்..! புட்டுப்புட்டு வைத்த சவுக்கு சங்கர்..!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

49 minutes ago at 49 minutes ago