https://republictn.com/

முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழறிஞருமான கருணாநிதியின் 103வது பிறந்தநாளை ஒட்டி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது எக்ஸ் (X) தளப் பதிவின் மூலம் மரியாதை செலுத்தியுள்ளார்.

அவரது பதிவில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கருணாநிதி ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தனது நெஞ்சார்ந்த மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிப்பதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்த கருணாநிதியின் சாதனைகளைப் போற்றும் வகையில், இந்த வாழ்த்துச் செய்தியை முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago