பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் உள்ள ரேஞ்சர்ஸ் கராச்சி அலுவலகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் முதலில் அலுவலக வாயிலில் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்தனர். அதன் பிறகு அப்பகுதி முழுவதும் துப்பாக்கிச் சூடு வெடித்தது. இந்தத் தாக்குதலில் இதுவரை மூன்று ரேஞ்சர்ஸ் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சாலை பல பல்கலைக்கழகங்கள், பாகிஸ்தான் வானிலை ஆய்வுத் துறைக்கு அருகில் உள்ளன. விரைவுப் பதில் படை காவல்துறை கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. காவல்துறை, துணை ராணுவப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர்.
கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜோஹரில் உள்ள துணை ராணுவப் படைத் தளத்தின் மீது சனிக்கிழமையன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று சிந்து ரேஞ்சர்ஸ் வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக மாகாண காவல்துறைத் தலைவர் தெரிவித்தார். உள்ளூர் ரேஞ்சர்ஸ் தலைமையகத்தின் மீதான தாக்குதலில் ஆரம்பகட்ட தகவல்களின்படி மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக சிந்து இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜாவேத் ஆலம் ஓதோ கூறினார். இதுவரை மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும், சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு கமாண்டோக்கள், பயங்கரவாத எதிர்ப்புப் படை, ரேஞ்சர்ஸ் வீரர்கள் அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளதாகவும் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார். அப்பகுதியில் பலத்த துப்பாக்கிச் சூடு, வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படைகள் அங்கு வந்ததாக அவர் மேலும் கூறினார். நிலைமையைக் கட்டுப்படுத்த, விரைவுப் பதில் படை, காவல்துறை கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளும் அப்பகுதியைச் சுற்றி வளைத்தன. குலிஸ்தான்-இ-ஜோஹர் பிளாக் 5 அருகே வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து, ரெஸ்க்யூ 1122 சிந்து பிரிவு தனது மத்திய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உடனடியாக குழுக்களை அனுப்பியதாகத் தெரிவித்தது.
மீட்பு பணிக்காக 1122 குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. முதலமைச்சரின் மறுவாழ்வு ஆலோசகர் கியான் சந்த் இஸ்ரானி, ரெஸ்க்யூ 1122 பிரிவின் தலைமை இயக்குநர், ஓய்வுபெற்ற பிரிகேடியர் வாஜித் சிப்கதுல்லா ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில், தலைமை செயல்பாட்டு அதிகாரி டாக்டர் அபித் ஜலாலுதீன் ஷேக்கும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டார்.
மொசாமியாத் சௌரங்கி அருகே நடந்ததாகக் கூறப்படும் வெடிவிபத்து, துப்பாக்கிச் சூடு குறித்த தகவல்களை சிந்து முதலமைச்சர் சையத் முராத் அலி ஷா கவனத்தில் கொண்டு, இச்சம்பவம் குறித்த விரிவான அறிக்கையைக் கோரியுள்ளார். முதலமைச்சர், சிந்து இன்ஸ்பெக்டர் ஜெனரல், கராச்சி கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரலைத் தொடர்புகொண்டு, உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, சம்பவத்தின் தன்மையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். குலிஸ்தான்-இ-ஜோஹரில் நடந்த இந்தச் சம்பவத்தை சிந்து உள்துறை அமைச்சர் ஜியா-உல்-ஹசன் லஞ்சரும் கவனத்தில் கொண்டு, கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் இருந்து விரிவான அறிக்கையைக் கோரியுள்ளார். உள்துறை அமைச்சகத்தின்படி, இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
