https://republictn.com/

குராஜத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் மக்களை உலுக்கியுள்ளது. வன்முறையான மாஃபியா பாணி ஆன்லைன் விளையாட்டால் அடிமையான ஒரு சிறுவன், தனது நண்பனுடன் சேர்ந்து, தன் சொந்தத் தாயைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணையில், அந்தச் சிறுவன் ஒரு காலத்தில் படிப்பில் சிறந்து விளங்கியதாகவும், ஆனால் மெல்ல மெல்ல செல்போன், ஆன்லைன் வீடியோக்கள், வன்முறை அனிமேஷன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. அவனது தாய், செல்போனில் விளையாடுவதைக் குறைத்து படிப்பில் கவனம் செலுத்துமாறு அடிக்கடி அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும், அவன் தாய் சொன்னதை அழுத்தமாகவே கருதியதாகக் கூறப்படுகிறது.

ஒரு தனிப்பட்ட பிரச்சினைக்காகக் கண்டித்தபோது அந்தச் சிறுவனுக்குக் ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் அவன் தனது நண்பனுடன் சேர்ந்து தாயை கொல்ல திட்டமிட்டான். வன்முறையான டிஜிட்டல் விளையாட்டு இளம் மனங்களை எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும் என்பது குறித்து இந்தச் சம்பவம் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

பெற்றோர்கள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் ஆன்லைனில் என்ன பார்க்கிறார்கள்? அவர்களின் நண்பர்கள் யார்? அவர்கள் உணர்ச்சி ரீதியாக எப்படி நடந்துகொள்கிறார்கள்? என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற மனதைப் பாதிக்கும் சம்பவங்களைத் தடுக்க, வீட்டில் நட்பாக பேசுவதும் உணர்ச்சி ரீதியான ஆதரவும் மிகவும் முக்கியம்.

தீய பழக்கங்களின் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்பாக, குழந்தைகளைச் சரியான வழியில் வழிநடத்த வேண்டும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக இந்தத் துயரச் சம்பவம் தற்போது குடும்பங்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூகத்திற்கும் எடுத்துக்காட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago