https://republictn.com/

“ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் உதவிப் பேராசிரியர் தேர்வு முறைகேடு, தற்போது த.வெ.க ஆட்சியிலும் தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முன்னாள் ஆட்சியாளர்களோடு தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு ரகசியப் புரிதல் உள்ளதா என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
இதனால்தான் லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியில் திரண்டனர். நீட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளில், கடினமாகப் படித்துத் தேர்வெழுதியவர்களைப் புறக்கணித்துவிட்டு, பணம் கொடுத்தவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யும் முறைகேடுகள் நடந்தன. அதே போன்றதொரு சூழல் தமிழ்நாட்டிலும் உருவாகியுள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் தனது முகநூல் பதிவில், ”தமிழ்நாட்டில் அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வை எழுதிய 47,000 பேர், கடந்த நான்கு நாட்களாகக் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். வினாத்தாள் திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் குறித்துத் தேர்வான இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியும், உயர்கல்வித் துறைக்கு புகார்களை அனுப்பியும் வருகின்றனர். ஊடகங்களும் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்களும் இதைக் கண்டிக்கின்றனர்.

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இதுவரை இது குறித்து வாய் திறக்கவில்லை. தனது துறையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒரு அமைச்சர் இப்படி இருக்க முடியுமா? 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல வாய்ப்பு இது. உண்மையில், தமிழ்நாட்டில் 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 2,708 இடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவது ஒரு ஆறுதலான விஷயம்.

இத்தேர்வை எழுதியவர்களில் 8,747 பேர் ஏற்கனவே பல ஆண்டுகளாகக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள். கல்வித் துறையில் இருப்பதால் பாடத்தில் அவர்களுக்கு நல்ல புலமை இருக்கும்.
முதல் தாளின் ‘பி’ பிரிவில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பதற்கான தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. அவர்களில் பலர் 100 மற்றும் 110-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

இரண்டாவது பகுதியில் ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு, அவற்றில் ஒன்றுக்கு 300 சொற்களில் கட்டுரை எழுத வேண்டியிருந்தது. இதில் பலருக்கு 50-க்கு பூஜ்ஜியம் அல்லது ஒற்றை இலக்க மதிப்பெண் மட்டுமே கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேட்கப்பட்ட கேள்விகள் கடினமானவை அல்ல. நன்றாக எழுதக்கூடியவைதான். முனைவர் பட்டம் பெற்ற எங்களுக்கு எந்தவொரு பாடத்திலும் அடிப்படைப் புரிதல் இருக்கும். பூஜ்ஜியம் அல்லது ஒற்றை இலக்க மதிப்பெண் பெறும் அளவுக்கு யாரும் அறிவற்றவர்கள் அல்ல. அதே சமயம், 150-க்கு 47 மதிப்பெண் பெற்ற சிலர், கட்டுரை எழுதும் பகுதியில் 50-க்கு 49 மதிப்பெண் பெற்றிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் டிசம்பர் மாதம் இத்தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜனவரி மாதமே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிப்ரவரி மாதத்தில்தான் தேர்வு எழுதியவர்களில் ஐந்து பேருக்கு மட்டும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய வகையில் திருத்தப்பட்ட நேர்காணல் தேர்வு இது. உடனடியாக அப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

த.வெ.க அரசு பொறுப்பேற்று 40 நாட்கள் ஆன நிலையில், தற்போது இந்தத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முடிவுகளை வெளியிடுவதற்கு முன் உயர்கல்வித் துறைச் செயலாளரும், அமைச்சரும் மேற்பார்வை செய்திருந்தாலும், இதில் நடந்த முறைகேடுகளின் தீவிரத்தை உணர முடிகிறது.

இது ஆயிரக்கணக்கானோரின் எதிர்காலம் மட்டுமல்ல, அந்த ஆயிரக்கணக்கான பேராசிரியர்களிடம் கல்வி கற்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயமாகும். எனவே, இச்சிக்கலைக் கவனத்தில் கொள்ளாமல் தேர்வு முடிவுகளை அறிவிப்பது பெரும் தவறாக அமையும். ஏனெனில், ஆறு மாதங்களாகத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில்,
ஏற்கனவே வெறும் ஐந்து பேரை நியமித்ததில் நடந்த தவறுகளே சர்ச்சைக்குரியதாக இருக்கும்போது, தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார் என்றால், இச்சிக்கலில் தொடர்புடைய முன்னாள் ஆட்சியாளர்களுடன் அவருக்கு ஏதேனும் இணக்கமான புரிதல் உள்ளதா? இதுவே இப்போது எழும் கேள்வியாகும்.

காங்கிரஸ் தரப்பில் விசாரித்தால், “திமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தியவர் விஸ்வநாதன் தான். ஆனால், இப்போது நாங்கள் த.வெ.க. அரசுடன் இணக்கமாக இருப்பதாகவே கருதுகிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago