https://republictn.com/

காவல்துறை மீது முதலமைச்சர் விஜய்க்கு நம்பிக்கை இல்லையா என்ற கேள்வியை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவராக இருந்தபோது, மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒவ்வொரு தருணத்திலும் அவருக்கு தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

அந்த நிலையில், தற்போது முதலமைச்சராகப் பதவி வகித்து வரும் சூழலிலும் அதே தனியார் பாதுகாவலர்கள் அவரது பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது எந்த வகையில் சாத்தியம் என்ற கேள்வியை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கோர் செல் உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலர்களுடன் தொடர்ந்து செயல்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மாநில காவல்துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதலமைச்சருக்கே முழுமையான நம்பிக்கை இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர் பாதுகாவலர் என்ற பெயரில் முதலமைச்சரின் நிழலாக தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்புடையதா என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அதோடு, அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் அந்த நபர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார் என்பதையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான விதிமுறைகளுக்கு முதலமைச்சரின் இந்த நடவடிக்கை உட்பட்டதா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

தமிழக முதல்வர் வசம் உள்துறைத் துறை உள்ள நிலையிலும், அரசின் பல அடுக்கு பாதுகாப்பு வளையம் வழங்கப்பட்டுள்ள சூழலிலும், தனியார் பவுன்சர்களை பயன்படுத்துவது மாநில காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது முதலமைச்சருக்கே நம்பிக்கை இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இன்பதுரை சாடியுள்ளார்.

மேலும், பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு சார்ந்த முக்கிய அம்சங்கள் தொடர்பாக எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் தரப்பு பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் விஜயின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அல்லது பவுன்சர்களுக்கு எந்த விதிமுறைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிமுக எம்.பி. இன்பதுரை தனது பதிவின் மூலம் முன்வைத்துள்ளார்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்மையில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே அரசியல் ரீதியான வார்த்தைப் போராட்டங்கள் மற்றும் கருத்து மோதல்கள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago