Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 24 வயது அண்ணனின் உடலுக்கு, தங்கை கண்ணீருடன் ராக்கி கட்டிய நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஷாத்நகர் அருகே உள்ள சடன்பல்லி கிராமத்தில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. ஷாத்நகர் பகுதியிலுள்ள நேரு நகர் காலனியைச் சேர்ந்தவர் ஜமால்பூர் நவீன் (24). எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்த நவீன், சடன்பல்லி ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு இறைச்சிக் கடையில் மின்சார ஒயர்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில், நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நவீனின் தங்கை பூஜிதா, ரக்ஷா பந்தன் பண்டிகை அன்று தனது அண்ணனுக்கு ராக்கி கட்டி, அவருக்கு இனிப்புகள் ஊட்டி மகிழ வேண்டும் என்ற ஆசையில் ராக்கி கயிறு வாங்கி வைத்திருந்தார்.

ஆனால், பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே அண்ணன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தகவல் பூஜிதாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்க  பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்பது லாபமா..? நஷ்டமா..? சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா..!

அண்ணனின் உடல் இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு வரப்பட்டபோது, பூஜிதா தாங்க முடியாத துயரத்தில் கதறி அழுதார். உயிரோடு இருக்கும்போது அண்ணனின் கையில் கட்ட வேண்டிய ராக்கியை, அவரது உயிரற்ற கையில் கண்ணீருடன் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது அண்ணனின் உடலைப் பார்த்து, “அண்ணா… ஒருமுறை எழுந்திரு அண்ணா… உனக்காக ராக்கி கொண்டு வந்திருக்கிறேன்…” என்று கதறியபடி, நடுங்கும் கைகளால் நவீனின் கையில் ராக்கி கயிற்றைக் கட்டினார் பூஜிதா.

“அண்ணா, எனக்காக ஒரே ஒரு முறை கண் திறந்து பார்… உனக்காக ராக்கி கொண்டு வந்திருக்கிறேன்…” என்று அவர் அழுத காட்சி அங்கிருந்த உறவினர்களையும், கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அண்ணனுக்கு ராக்கி கட்டி மகிழ வேண்டும் என்ற ஆசையில் வாங்கிய கயிறு, அவரது இறுதிச் சடங்கில் கட்டப்படும் நிலைக்கு வந்தது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நவீன் எலக்ட்ரீஷியனாக அன்றாடப் பிழைப்புக்காகவே அந்த இறைச்சிக் கடையின் மின்சாரக் கோளாறைச் சரிசெய்யச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மின் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததே அவர் உயிரிழக்கக் காரணமாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  இந்தியாவுக்கு ஆபத்து… பிரம்மபுத்திரா நதி பிளவுக்கோட்டில் அணை கட்டும் சீனா..சொந்த நாட்டு விஞ்ஞானிகளே எச்சரிக்கை!

ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முன்னதாகவே அண்ணனை இழந்த தங்கையின் இந்த சோகக் காட்சி, அப்பகுதி மக்களை மட்டுமின்றி சமூக வலைதளங்களில் இதைப் பார்த்த பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 hours ago at 4 hours ago