https://republictn.com/

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அல்லது மாவட்ட நிர்வாகங்கள் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று (ஜூலை 13, 2026) முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

விதிமுறைகளை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கிலும், உச்சநீதிமன்றம் ஏற்கனவே வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும். ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அல்லது மாவட்ட நிர்வாகங்கள் எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசால் வெளியிடப்பட்ட அரசாணைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் தங்களது மாவட்டங்களில் முறையாகவும் தீவிரமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், உரிய அனுமதி பெறாமலோ அல்லது நடைமுறையில் உள்ள விதிமுறைகளை மீறியோ ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளின் நலனும், மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 hours ago at 22 hours ago