https://republictn.com/

சமீபத்தில், பிரதமர் மோடி இந்தியர்களுக்குப் பல வேண்டுகோள்களை விடுத்தார், அதில் ஒன்று வீட்டிலிருந்து வேலை பார்ப்பது. ஆனாலும், ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, ”எனது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கும் திட்டம் ஜோஹோவிற்கு இல்லை. அலுவலகத்தில் வேலை செய்வது இன்னும் சிறந்த முடிவுகளைத் தருகிறது. குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டைப் பொறுத்தவரை, டீம்கள் நேரில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே சமீபத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க ஆன்லைன் கூட்டங்கள், ஒர்க் ப்ரம் ஹோம் போன்ற சில பழக்கவழக்கங்களை நிறுவனங்களும், பொது மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அலுவலகப் பணி கலாச்சாரம் குறித்த தனது முந்தைய கருத்துக்களுக்கு இணையத்தில் ஏராளமான கருத்துக்களும் எதிர்ப்புகளும் வந்ததாக ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவைத் தொடர்ந்து, அவரது நிறுவனத்தின் சீனியர்கள இதைப் பற்றி ஆழமாக விவாதிக்கின்றனர். ஆனாலும், சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அலுவலகத்தில்பணி புரிவதே மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டாம் என்று ஜோஹோ முடிவு செய்துள்ளதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது எக்ஸ் பதிவில் பலரிடமிருந்து ஃபீட்பேக்குகளைப் பெற்ற பிறகு, வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஏனென்றால், மக்கள் ஒரே அறையில் நேருக்கு நேர் இணைந்து புதிய விஷயங்களைக் கண்டறிந்து உருவாக்கும்போது, ​​பிரச்சனைகளைத் தீர்ப்பது மிகவும் எளிதாகிறது. வேலையின் வேகமும் தரமும் கணிசமாக மேம்படுகின்றன. மேம்பாட்டுக் குழுக்களுடனான தனது சொந்த அனுபவத்தில், ஊழியர்கள் தொலைவிலிருந்து பணிபுரியும்போது, ​​பிரச்சனைகளைத் தீர்க்க அதிக நேரம் எடுக்கும். டீம்கள் நேரில் ஒன்றாக இருக்கும்போது, ​​சிறந்த யோசனைகள் உருவாகின்றன. தீர்வுகள் விரைவாகக் கண்டறியப்படுகின்றன” என்று அவர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நிறுவனங்கள் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவில்லை என்றால், மற்ற நிறுவனங்களும் தங்கள் கவலைகளை எழுப்பி, வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யலாம் எனத் தெரிகிறது. ஆராய்ச்சி, மேம்பாடு போன்ற பணிகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது சற்று கடினமாகத் தெரிகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருளைச் சேமிக்குமாறு இந்திய அரசு மக்களையும் வணிகங்களையும் ஊக்குவித்து வருகிறது. சமீபத்தில், கோவிட்-19 பெருந்தொற்றின் போது கடைப்பிடித்த பழக்கவழக்கங்களை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் மோடி இந்தியர்களை வலியுறுத்தினார்.
வீட்டிலிருந்து வேலை செய்வது, இணையவழி மாநாடுகள் மற்றும் பயணங்களைக் குறைப்பது ஆகியவை இதில் அடங்கும். இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும் உலகளாவிய நிலையற்ற தன்மைக்கு இந்தியா தயாராக வேண்டும் என்று மோடி கூறி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago