தனித்தேர்வு மாணவர்கள் வரும் 18ஆம் தேதி முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மேல்நிலை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் வாயிலாகவும், தனித் தேர்வர்கள் மாவட்டவாரியான சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
