Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையும், வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு பரபரப்புகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தலைமையைச் சுற்றிய அதிருப்தி, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், மூத்த நிர்வாகிகளின் அதிருப்தி உள்ளிட்ட விவகாரங்கள் பேசுபொருளாக இருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

Republic Tamil

வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது அறையில் நேரில் சந்தித்தனர். கோவை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நீர்வளத் திட்டங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “அ.தி.மு.க. எங்களுடைய கட்சி. எங்களை வளர்த்த கட்சி. அதில் எந்த மாற்றமும் இல்லை. சிலர் தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. நாங்கள் அ.தி.மு.க.வில்தான் இருக்கிறோம்; தொடர்ந்து அதிலேயே இருப்போம். இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  பள்ளி விழாவில் வெடித்த சர்ச்சை..! மேயருக்கு செக் வைத்த சபாநாயகர்..! எகிறும் அரசியல் பரபரப்பு!

அ.தி.மு.க.வில் பல்வேறு அரசியல் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால், கட்சிக்குள் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

Republic Tamil

அதற்கு முன்பாக, சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பும், எஸ்.பி. வேலுமணி தரப்பும் சபாநாயகரிடம் மாறி மாறி புகார்கள் அளித்திருந்தன. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர், கடந்த ஜூன் மாத இறுதியில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானாலும், அண்மைக் காலமாக மீண்டும் அதிருப்தி நிலவி வருவதாக செய்திகள் பரவின. மேலும், அ.தி.மு.க. தலைமை அறிவித்த புதிய உட்கட்சிப் பொறுப்புகள் மற்றும் பதவிகளை எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகள் ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதுவும் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இன்னும் முழுமையாக தீரவில்லை என்ற அரசியல் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

இந்தச் சூழலில்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி. வேலுமணி, “தேர்தல் தோல்விகளால் அ.தி.மு.க. தற்போது மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளது. மீண்டும் முதல் இடத்தைப் பெற வேண்டுமெனில், கட்சியை விட்டு பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிடம் வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க  இபிஎஸ் பின்னால் ஒருத்தன் இருக்க மாட்டான்..! விரைவில் திமுக + அதிமுக+பாஜக கூட்டணி அமையும்..? பகீர் கிளப்பும் ஆதவ் ..!
Republic Tamil

இதற்கிடையில், எஸ்.பி. வேலுமணி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அந்தச் செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை என்றும், ஆதாரமற்ற வதந்திகள் என்றும் திட்டவட்டமாக மறுத்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவளித்தது ஏன் என்ற கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்தார். “அந்தச் சூழலில் தவெக, தி.மு.க.-வுக்கு எதிராகத் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தது. அதனால்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. எங்களின் பிரதான அரசியல் எதிரி தி.மு.க.தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் எப்போதுமே அ.தி.மு.க.வில்தான் இருக்கிறோம்; அதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.

“அத்திக்கடவு–அவிநாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான திட்டம். அந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை தற்போதைய தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்தினோம்.

Republic Tamil

குறிப்பாக, கோவை மாவட்டத்தில் இன்னும் பயன்பெறாத குளங்களும், எனது தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள குளங்களும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்க  சிபாரிசோடு யாரும் வராதீங்க… கூட்டணி கட்சியினருக்கு ஆப்பு..! விஜய் கறார் உத்தரவு..!

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எனவே, அந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம்” என்று தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசு மக்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சித் திட்டங்களை முன்னுரிமையுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் கோவை மாவட்ட வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

எனவே, கோவை மாவட்டத்திற்கு மீண்டும் பழையபடி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்கான அடிப்படைத் திட்டமாக அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதையே அமைச்சரிடம் வலியுறுத்தினோம்” என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

அவரது இந்த விளக்கத்தின் மூலம், கட்சி மாறும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, அ.தி.மு.க.வில்தான் தொடர்கிறோம் என்ற தனது அரசியல் நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago