சென்னை கே.கே. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் நேற்று காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அப்போது அந்த வழியாக காரில் பட்டாக்கத்தியுடன் வந்த பிரபல ரவுடி ‘நாய்’ மணிகண்டனை போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றனர். வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, காரிலிருந்து திடீரென இறங்கிய மணிகண்டன், பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) பழனியைத் தாக்கிவிட்டு, தனது கூட்டாளிகளுடன் காரில் தப்பிச் சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உரசும் விசிக.. நெருங்கும் பாமக..! தவெக-வும் வேணும்… திமுக-வும் வேணும்.. திருமாவின் டபுள் கேம்..!
தாக்குதலில் காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி உடனடியாக மீட்கப்பட்டு, கே.கே. நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கே.கே. நகர் போலீசார், முதற்கட்டமாக தனிப்படை அமைத்து தப்பியோடிய ரவுடி மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ‘பி’ வகை ரவுடியான ‘நாய்’ மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
“இனி Pub-க்கு இவங்க போனா அவ்வளவுதான்! ‘நோ என்ட்ரி’ போட்ட அமைச்சர்.. அதிரும் தமிழ்நாடு!”
கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரவுடித்தனம், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் அவர் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.
“படிப்பு எதுக்கு? செக்யூரிட்டி ECG..சமையல்காரர் தையல்! புதுக்கோட்டை GH-ன் அடுத்த கூத்து!”
மேலும், சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக செயல்படும் ரவுடிகள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் ரவுடிகளின் பின்னணி, அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்கள் ஈடுபட்டு வரும் குற்றச் செயல்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
