https://republictn.com/

காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் குஜராத், மத்தியப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் காலியாக உள்ள இடங்களுக்கும் இதே தேதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் சுமார் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

இந்தத் தேர்தலில் வேட்பாளர்கள் அந்தந்த அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படுவர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறக்கத் தயாராகி வருகின்றன.

மாநிலங்களவை தேர்தல் நியமன முறையின் அடிப்படையில் நடைபெறுவதால், சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் வலிமை அடிப்படையில் வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

அதன்படி, கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீத அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago