Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஜெய்ப்பூரின் கோ நாகோரியன் (Khoh Nagoriyan) காவல் எல்லைக்குட்பட்ட ஆயிஷா நகர் தாலி காலனி பகுதியில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பு வீட்டில், உரிய அனுமதியின்றி பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய வெடிபொருட்கள் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஜூன் 9ஆம் தேதி திடீரென ஏற்பட்ட உராய்வு அல்லது வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், தீ வேகமாக பரவியது.

விபத்தின் போது ஏற்பட்ட கொடூரமான தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் இரண்டு உடன்பிறந்த சகோதரர்கள் உட்பட மொத்தம் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  "மனைவியைக் கொன்றுவிட்டு சடலத்தை காதலிக்கு அனுப்பிய கணவன்! அமெரிக்காவையே உலுக்கிய 'சைக்கோ' சாஃப்ட்வேர் இன்ஜினியர்!"

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் (SMS) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், தடயவியல் (Forensic) நிபுணர்களின் உதவியுடன் விபத்து நடந்த இடத்தில் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீ விபத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

சட்டவிரோதமாக இந்த வெடிபொருள் சேமிப்பு மையத்தை நடத்தி வந்த குடோன் உரிமையாளர்கள் மற்றும் இதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெய்ப்பூர் நகர காவல் ஆணையர் சச்சின் மிட்டல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago