விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. கட்சி தொடங்கப்பட்ட இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆட்சியைப் பிடித்துள்ளது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்குப் பிறகு காணப்படாத ஒரு வரலாற்றுச் சாதனையாக இது கருதப்படுகிறது. இது மாபெரும் ஆச்சரியம். ஏனென்றால் தேர்த்லுக்கு முந்தைய கணிப்புகளின்படி, விஜய் 20 அல்லது 30 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுவார் என்றும், அவரது கட்சி முக்கியமாக அதிமுக_ மற்றும் திமுகவின் வாக்குகளைப் பிரிக்கும் என்றும் நம்பப்பட்டது. ஆனாலும், தவெக ஆட்சியை அமைத்தது.
தமிழ்நாட்டின் விஜயைப் போலவே, பவன் கல்யாணும் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிரமாக வழிநடத்தினார். அவர் தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராக உள்ளார். இதனால், விஜய்- பவன் கல்யாண் இடையே தற்போது ஒப்பீடுகள் செய்யப்படுகின்றன. முதலமைச்சர் பதவியை வகித்த விஜய்யுடன் தன்னை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்களுக்கு, ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் சூழலும், சூழ்நிலைகளும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை என்று பவன் கல்யாண் கூறியுள்ளார். மற்ற அனைவரும் தன்னைக் கைவிட்டபோதும், கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பைத் தனி ஒருவராக ஏற்றுக்கொண்டதாக அவர் விளக்கினார். ஜன சேனா இடதுசாரி கட்சியும் அல்ல, வலதுசாரி கட்சியும் அல்ல என்று பவன் கல்யாண் தெளிவுபடுத்தினார். மாறாக, பல்வேறு அரசியல் கட்சிகளின் நேர்மறையான கூறுகளையும் சித்தாந்தங்களையும் இணைத்து இந்தக் கட்சியை அவர் தொடங்கினார்.
”2008-ஆம் ஆண்டிலிருந்தே ஒரு அரசியல் கட்சியை எப்படி நடத்துவது என்பது குறித்து நான் நுணுக்கமாகத் திட்டமிட்டு வந்தேன். கடந்த ஆறு ஆண்டுகளாகத் எனக்குள் வளர்ந்து வந்த ஒரு கருத்தாக, ஒரு யோசனையாக ஜன சேனாவை ஆரம்பித்தேன். முதலமைச்சர் ஆவதற்காகவோ அல்லது அரசியல் பதவியுடன் வரும் சலுகைகளை அனுபவிப்பதற்காகவோ மட்டுமே நான் கட்சியை உருவாக்கவில்லை. ஜன சேனா பிரச்சாரம் செய்த மற்ற மாநிலங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் முற்றிலும் வேறுபட்டது.ஆந்திரப் பிரதேசத்தின் அரசியல் சூழல் தனித்துவமானது.
இரண்டு தெலுங்கு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் மக்கள் பெருமளவில் ஜன சேனா கட்சியில் இணைந்து அதன் கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். முந்தைய கோவிட்-19 தொற்றால் எனக்கு ஏற்பட்ட நுரையீரல் தொற்று இன்னும் நீடிக்கிறது”என்றார்.
எனது அரசியல் பயணங்களின் போது தூசி, அழுக்குக்கு ஆளாவதால் மற்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. நான் பயணம் செய்யும்போது, எனது ரசிகர்கள் அன்புடன் இருபுறமும் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். எனது தோள்களுக்கு இடையிலான தூரம் அதிகரித்து, எனக்கு சில அசௌகரியங்கள் ஏற்படுகிறது. இந்த முதுகுத்தண்டு பிரச்சனைகள், பிற உடல்நலக் குறைபாடுகள் இருந்தபோதிலும், நான் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இதற்குத் எனது நண்பர்கள், ரசிகர்களின் பிரார்த்தனைகளே காரணம்” என்றும் அவர் கூறினார்.
