Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் 5-வது மாடியில் இருந்து குதித்து, 19 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த அருளின் மகள் ஷெரின் (19). இவர் தண்டலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence (AI) தொழில்நுட்பப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

வழக்கம்போல் நேற்று மதியம் கல்லூரிக்கு வந்த ஷெரின், சுமார் 1 மணியளவில் வகுப்பறையில் இருந்துள்ளார். பின்னர் திடீரென வகுப்பறையை விட்டு வெளியேறிய அவர், கல்லூரியின் 5-வது மாடிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு யாரும் எதிர்பாராத வகையில், 5-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்ட சக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால், மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டது.

இதையும் படியுங்க  ''விஜய்யை ஜெயிக்க வச்சதே அமித்ஷாதான்!" – தமிழக அரசியலில் 'மோடிபோபியா..! ராமசீனிவாசன் பகீர்..!

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மாணவி ஷெரின் தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தக் கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.


Republic Tamil

மாணவி எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் அந்தக் கடிதத்தில், தனது காதல் விவகாரம் குறித்தும், அதற்கு பெற்றோர் தெரிவித்த எதிர்ப்பு குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்ததாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், காதல் விவகாரத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாணவி ஷெரினின் தந்தை அருள், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். பூந்தமல்லி பகுதியில் வசித்து வரும் அவரது குடும்பத்தினர், மகளின் இந்த துயர முடிவால் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர்.

இதையும் படியுங்க  காசுக்கு விலைபோன போலீஸாரின் சல்லித்தனம்..! திருப்பத்தூரை உலுக்கும் ரேஷன் அரிசி கடத்தல் ஊழல் ஆடியோ..!

நேற்று மதியம் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவி, சுமார் 1 மணியளவில் வகுப்பறையில் இருந்து வெளியேறிய நிலையில், திடீரென 5-வது மாடிக்குச் சென்று இந்த துயர முடிவை எடுத்திருப்பது சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி எதற்காக திடீரென 5-வது மாடிக்குச் சென்றார்? அவருக்கு அப்போது யாருடனாவது தொடர்பு இருந்ததா? தற்கொலை செய்வதற்கு முன்பு யாரிடமும் பேசினாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மாணவியின் தோழிகள், சக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் மற்றும் அவரது செல்போன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து, தற்கொலைக்கான முழுமையான காரணத்தை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவி இந்த விபரீத முடிவை எடுத்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்கொலைக்கான துல்லியமான காரணம் என்ன என்பது போலீசாரின் முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.

இதையும் படியுங்க  ''அதை எப்போதும் கையில பிடிச்சுக்கிட்டே இருப்பியா..?" கண்டித்த தாய்..! கல்லூரி விபரீத முடிவு..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவி 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சக மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago