Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

லண்டனில் நண்பர்களுடன் விடுமுறையைக் கழித்து வரும் நடிகை திரிஷாவின் தனிப்பட்ட வீடியோ ஒன்று அவரது அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலான நிலையில், அந்த வீடியோவை எடுத்துப் பகிர்ந்தவர்களுக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லண்டனின் சைனாடவுன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திரிஷா தனது தோழிகளுடன் அமர்ந்திருந்தபோது, அவரை அடையாளம் கண்ட ஒருவர் தொலைவில் இருந்து வீடியோ எடுத்துப் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ 25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “பிரபலமாக இருந்தாலும் அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனியுரிமை உள்ளது” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர் தனது தனிப்பட்ட நேரத்தை நண்பர்களுடன் செலவிடும்போது, அவரது அனுமதியின்றி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வது தவறான செயல் என்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“கொஞ்சமாவது நாகரிகம் இருக்க வேண்டும்”, “அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள்” எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். எப்போதும் படப்பிடிப்பு மற்றும் சினிமா பணிகளில் பிஸியாக இருக்கும் நடிகை, தனது விடுமுறை நேரத்தையாவது எந்தவிதத் தொந்தரவும் இன்றி செலவிட அனுமதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்க  "புகழுக்கு அடிமையானேன், எல்லாமே முடிந்தது என அழுதேன்: சமந்தாவின் எமோஷனல் பேட்டி!"

இந்த வீடியோவை மாளவிகா ரகுநாத் (Malavika Raghunath) என்ற இன்ஸ்டாகிராம் பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் சைனாடவுன் பகுதியில் சென்றபோது திரிஷாவைத் தற்செயலாகப் பார்த்ததாகவும், அந்தச் சந்திப்பை ஒரு ‘செலிபிரிட்டி ஸ்பாட்டிங்’ தருணமாகப் பதிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வீடியோவுக்கு எதிராக தனியுரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அந்தப் பதிவை வெளியிட்ட நபர் தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதிக்கப்படும் உணவகத்தில்தான் திரிஷா இருந்ததாகவும், அவரிடம் நெருங்கிச் சென்று தொந்தரவு செய்யாமல் தூரத்திலிருந்து மட்டுமே வீடியோ எடுத்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Republic Tamil

ஒருபுறம் திரிஷாவின் தனியுரிமைக்காக நெட்டிசன்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் வீடியோவில் அவர் அமர்ந்திருந்த விதம் மற்றும் தோற்றத்தை வைத்து விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கு திரிஷாவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதாரண உடையில் நண்பர்களுடன் கேஷுவலாக இருக்கும் ஒரு பெண்ணின் தோற்றத்தைக் கூட விமர்சிப்பது தேவையற்றது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்க  ஹாலிவுட்டின் இரு ராணிகள் இணைகின்றனர்… ஏஞ்சலினா ஜோலியுடன் புதிய திட்டத்தை உறுதி செய்த பிரியங்கா சோப்ரா!

இதனிடையே, திரிஷாவின் லண்டன் பயணத்தைத் தொடர்ந்து அவரை தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான நடிகர் விஜய்யுடன் இணைத்து பழைய வதந்திகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் விஜய் கொடியேற்றிய நிகழ்ச்சியில் திரிஷா கலந்து கொண்டதைச் சுட்டிக்காட்டி சிலர் இந்த விவாதங்களை எழுப்பி வருகின்றனர்.

Republic Tamil

ஆனால், திரிஷா மற்றும் விஜய் தரப்பில் இந்த விவகாரம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.

திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் வதந்திகளுக்கு அவர் ஏற்கனவே தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது திருமணம் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து பரவிய கற்பனைக் கதைகளை கிண்டலாகக் குறிப்பிட்டு, “நான் படங்களை விட்டு விலகிவிட்டேனாம்… தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டேனாம். இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?” என நகைச்சுவையாகப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்க  த்ரிஷா-வை அள்ளித் தூக்கப்போவது ரஜினியா..? கமலா..? விஜய் ரசிகர்கள் ஷாக்..!

மேலும், அண்மையில் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “ஒரு மைக் கையில் இருப்பதால் ஒருவரது கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது; அது முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக மட்டுமே காட்டும்” என்ற கருத்தையும் அவர் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுகளையும் ரசிகர்கள் தற்போது மீண்டும் பகிர்ந்து வருகின்றனர்.

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், திரிஷா தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் பிஸியாக இருந்து வருகிறார். லண்டன் பயணத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களின் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிரஞ்சீவியுடன் இணையும் ‘விஸ்வம்பரா’ (Vishwambhara) மற்றும் மோகன்லாலுடன் நடிக்கும் மலையாளத் திரைப்படமான ‘ராம்’ (Ram) உள்ளிட்ட படங்கள் தொடர்பான பணிகளில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

பிரபல நடிகையாக இருந்தாலும், அவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனியுரிமைக்கான உரிமை உள்ளது என்பதே இந்த விவகாரத்தில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் முன்வைக்கும் முக்கிய கருத்தாக உள்ளது. பிரபலங்களைப் பொதுவெளியில் பார்க்கும்போது அவர்களிடம் மரியாதையுடனும், அவர்களின் தனிப்பட்ட நேரத்திற்கு மதிப்பளித்தும் நடந்து கொள்ள வேண்டும் என்ற விவாதத்தையும் இந்த லண்டன் வீடியோ மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago