https://republictn.com/

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே தற்போது நிலவும் போர் நிறுத்தம் எந்த நேரத்திலும் ஒரு முழு அளவிலான போராக மாறக்கூடும். இன்று டிரம்ப் மீண்டும் இதைப் பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராணுவம் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஈரான் ஒரு உடன்படிக்கைக்காக கெஞ்சுகிறது என்றும், நாளை போரை மீண்டும் தொடங்க தான் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். ஈரான் மீது ஒரு புதிய தாக்குதலைத் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது. கடற்படைக் கப்பல்கள் ஏவுகணைகள், பிற ஆயுதங்களுடன் முழுமையாகத் தயாராக இருக்கிறது. தாக்குதலுக்கு ஆயத்தமாக இருக்கிறது. வளைகுடா நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை ஒத்திவைத்டுள்ளோம்.

போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அவர் முயற்சிப்பதால், அமெரிக்க இராணுவம் ஈரான் மீது மற்றொரு பெரிய தாக்குதலைத் தொடங்க வேண்டியிருக்கலாம்” என்று கூறியுள்ளார். டிரம்பின் இந்த அறிக்கை மீண்டும் ஒருமுறை உலகம் முழுவதும் பரபரப்பையும் அச்சமான சூழலையும் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே, இந்த பதற்றம் உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்களைப் பாதித்துள்ளது. பணவீக்கத்தை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.

ஈரானுக்கு 2-3 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், அது அடுத்த வாரத் தொடக்கம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். நேற்று தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில், “ஐயா, தயவுசெய்து சிறிது நேரம் காத்திருக்க முடியுமா? நாங்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு மிக அருகில் இருப்பதாக நினைக்கிறோம்” என்று கேட்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

இதற்கிடையில், எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் எதிர்கொள்ள ஈரான் தயாராக இருப்பதாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதலை ஒத்திவைத்ததாகக் கூறிய டிரம்பின் நேற்றைய பதிவிற்கு காசெம் கரிபாபாடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் கரிபாபாடி, ட்விட்டரில் கூறியுள்ளார். “இது எந்த நேரத்திலும் ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. இதன் பொருள், ஒரு அச்சுறுத்தலை அமைதிக்கான வாய்ப்பாக மாறுவேடமிடுவது. ஒன்றுபட்ட, உறுதியான ஈரான், எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago