திமுக தலைமையிலான கூட்டணி என்ற ஒன்று தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை; மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையில் திமுகவுடன் சேர்ந்து போராட தயாராக உள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி 3 மாதம்கூட தாங்காது என சொல்லக்கூடாது, அது தவறு; மு.க.ஸ்டாலின், எடப்பாடி கே.பழனிசாமி என யார் கூறினாலும் தவறு.
தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர் ஆளும் கட்சியில் பலனை எதிர்பார்த்து சேருவதும், வாக்களித்த மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் வெற்றி பெற்றவர்கள் போய் ஆளும் தரப்பிடம் சேருவதும் ஒன்றல்ல. அடுத்து ஒரு தேர்தலைச் சந்திக்க வேண்டும்; அவர்கள் வீட்டு பணத்தையா செலவழிக்கப்போகிறார்கள்; இரண்டும் ஒன்றல்ல, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அலையும் இல்லை. அலை என்பதற்கும் தனிப்பெரும் கட்சி என்பதற்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது. அலை இருந்திருந்தால் அவருக்கு பெரும்பான்மை கிடைத்திருக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை 3 மாதம் கூட தாங்காது என கூறுவது தவறானது. அது ஸ்டாலினாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி. அவ்வாறு சொல்லக்கூடாது . தமிழகத்தில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை” எனக் கூறியுள்ளார்.
