https://republictn.com/

தெலங்கானா மாநிலத்தில் இதய வடிவில் உருவாக்கப்பட்டு வரும் முதல் கண்ணாடி பாலத்தை காண ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

சித்திப்பேட்டை மாவட்டம் ஹூசராபாத் நகரத்தில் ஐந்து அடித்தளங்களும், 100 மீட்டர் உயரமும் கொண்ட இதயம் போன்ற வடிவிலான கண்ணாடி பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

சுமார் ரூ.4.22 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பாலத்தின் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பே, இந்த பாலத்தை காண பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago