இந்தியச் சதுரங்க வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனையைத் தமிழகத்தின் இளம் நட்சத்திரம் ஆர்.பிரக்ஞானந்தா நிகழ்த்தியுள்ளார். உலகின் மிகக் கடினமான சதுரங்கத் தொடர்களில் ஒன்றான ‘கிராண்ட் செஸ் டூர்’ (Grand Chess Tour) பட்டத்தைக் கைப்பற்றி, இக்கோப்பையை வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியின் கடைசி நாளில், நடப்பு சாம்பியனான ஃபேபியானோ கருவானாவிடம் ஆறு புள்ளிகள் பின்தங்கி இருந்தபோதிலும், பிரக்ஞானந்தா மீண்டு வந்து எழுச்சியை நிகழ்த்தி பட்டத்தை வென்றார்.
3-9 என்ற புள்ளியில் இருந்து வெற்றி
கிளாசிக்கல் ஆட்டங்களுக்குப் பிறகு, பிரக்ஞானந்தா 3-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தார். பட்டத்திற்கான போட்டி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனாலும், அவர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரக்ஞானந்தா இரண்டு ரேபிட் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, புள்ளிக்கணக்கை 11-9 என மாற்றினார். பின்னர், கரூனா இரண்டாவது பிளிட்ஸ் போட்டியில் வென்று ஸ்கோரை 12-12 என சமன் செய்தார், ஆனால் பிரக்ஞானந்தா மூன்றாவது பிளிட்ஸ் போட்டியில் வென்று மீண்டும் முன்னிலை பெற்றார்.
இறுதிப் போட்டியில், டிரா மட்டுமே தேவைப்பட்டது. அதை பிரக்ஞானந்தா மூன்று முறை வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். ஆறு இறுதிப் போட்டிகளில், பிரக்ஞானந்தா மூன்றில் வெற்றி, இரண்டில் டிரா, ஒன்றில் மட்டுமே தோல்வியுற்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, ஆறு புள்ளிகள் வித்தியாசத்தைக் குறைப்பது எளிதாக இருக்கவில்லை என்றும், ஆனால் கடந்த ஆண்டை விட தனது ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றமே தனது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்றும் பிரக்ஞானந்தா கூறினார்.
பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்த பரிசு.!
இந்த பட்ட வெற்றி, 2026-ல் பிரக்ஞானந்தாவிற்கு மற்றொரு பெரிய சாதனையாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு, கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றவராக அவர் சுமார் ₹1.91 கோடி வென்றார். மேலும், அவர் 2027 டூருக்கு நேரடியாகத் தகுதி பெற்றார். அதுமட்டுமின்றி, 2026 சுற்று முழுவதும் அவர் மொத்தமாகசுமார் ₹4 கோடி பரிசுப் பணத்தை வென்றுள்ள்ளார்.
