உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் எரிபொருள் விலைகள் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே, இந்த விலை மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. டெல்லியில், பெட்ரோல் விலை 87 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 98.64 ஆகவும், டீசல் விலை 91 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 91.58 ஆகவும் அதிகரித்துள்ளது.
மே 19 முதல் அமலுக்கு வந்த திருத்தப்பட்ட சில்லறை விற்பனை விலைகளின்படி கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 96 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 109.70 ஆக அதிகரித்துள்ளது. இது பெருநகரங்களிலேயே மிக அதிகமான விலை உயர்வாகும்.
மும்பையில், பெட்ரோல் விலை 91 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 107.59 ஆகவும், சென்னையில் 82 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 104.49 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்கள் முழுவதும் டீசல் விலையிலும் புதிய உயர்வு காணப்பட்டது. சென்னையில் டீசல் விலை 86 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 96.11 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சமீபத்திய விலை உயர்வு, சில நாட்களுக்குள்ளாகவே எரிபொருள் விலையில் செய்யப்படும் இரண்டாவது மாற்றமாகும்.
இதற்கு முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருந்தன.உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், எரிபொருள் விலையில் இந்தச் சமீபத்தில் உயர்வுகள் நிகழ்ந்துள்ளன. கொல்கத்தா, மும்பையில், டீசல் விலை தலா 94 காசுகள் உயர்ந்து, முறையே லிட்டருக்கு ரூ.96.07 மற்றும் ரூ.94.08-ஆக அதிகரித்துள்ளது.
