Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உலா வந்தாலும், ஒரு சில காட்சிகள் மட்டுமே நம் மனதை அப்படியே உருகச் செய்துவிடும். அந்த வகையில், குட்டி முள்ளம்பன்றி ஒன்றை தன் செல்லப் பிராணி போல பாவித்து, அதனுடன் சிறுமி ஒருவர் நெல்வயலில் நடந்து செல்லும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது உலகளவில் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது.

​இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, பல சமூக ஊடகப் பயனர்களும், சில முன்னணி ஊடகங்களும் கூட இது பங்களாதேஷில் எடுக்கப்பட்ட காட்சி என்று தவறான தகவலுடன் பகிர்ந்து வந்தனர். ஆனால், தீவிரத் தேடலுக்குப் பின் இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த வீடியோ பங்களாதேஷில் எடுக்கப்பட்டது அல்ல; அண்டை நாடான இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவை பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.

​கடந்த ஜூன் 11-ஆம் தேதி, இலங்கையைச் சேர்ந்த ஒருவரின் முகநூல் பக்கத்தில், சிங்கள மொழித் தலைப்புடன் இந்த வீடியோ முதன்முதலாகப் பதிவேற்றப்பட்டது. சிறுமியின் கபடு சூதற்ற அன்பும், அந்த முள்ளம்பன்றி அவற்றுக்குப் பின்னால் அடிபற்றி ஓடிவரும் அழகும் நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்தது.

இதையும் படியுங்க  அமெரிக்க விஞ்ஞானிகளின் திடீர் மர்ம மரணங்கள்..! சீனா, ரஷ்யா, ஈரானின் சதி..? கதறும் டிரம்ப்..!

​இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுமியும் முள்ளம்பன்றியும் ஒன்றாக விளையாடும் மேலும் பல சுவாரசியமான வீடியோக்களும் அதே முகநூல் கணக்கிலிருந்து அடுத்தடுத்து வெளியிடப்பட்டு, தற்போது இணைய உலகையே வலம் வந்து கொண்டிருக்கின்றன.

​இயற்கையோடு இயைந்த மனித நேயமும், விலங்கினங்கள் மீதான மாசற்ற அன்பும் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago