Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரின் அடிப்படையில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட 6 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனைகள் 2026 ஜூன் 17 அன்று மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2004-ஆம் ஆண்டு, நடிகை கௌதமி புற்றுநோய் சிகிச்சையில் இருந்தபோது, தனது மகளின் எதிர்கால நலனுக்காக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கவும் விற்கவும் முன்னாள் மேலாளர் அழகப்பனிடம் ‘பவர் ஆஃப் அட்டர்னி’ (Power of Attorney) வழங்கியிருந்தார்.

இந்த அதிகாரத்தை அழகப்பனும் அவரது குடும்பத்தினரும் தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் பல சொத்துக்களை தங்களது பெயருக்கு மாற்றியதாகவும், கௌதமியின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.9.9 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மொத்தமாக ரூ.13.8 கோடி முதல் ரூ.25 கோடி வரையிலான மதிப்பிலான சொத்துக்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "பான் கார்டும் இல்ல.. முகவரியும் இல்ல! திமுகவிற்கு குவிந்த ₹365 கோடி: யார் அந்த 'மர்ம' நபர்கள்? அதிரடி ADR அறிக்கை!"

இதுதொடர்பாக நடிகை கௌதமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகம், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்தனியாக புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் காவல்துறை தரப்பில் மொத்தம் 7 வழக்குகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் நடைபெற்ற விசாரணையின் போது, அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள் உள்ளிட்ட மொத்தம் 5 பேரை காவல்துறை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் நிதி முறைகேடுகளை (Money Laundering) விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை வழக்கை கையில் எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே, சென்னை அண்ணாநகர் உள்ளிட்ட அழகப்பனின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago