https://republictn.com/

தமிழக அரசியலில் ஒரு காலத்தில் ‘மாற்றுச் சக்தி’யாக உருவெடுத்த அமமுக தற்போது அடுத்தடுத்து சந்தித்து வரும் மோசமான தோல்விகளால் அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளன. அதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான முருகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு கலைக்கப்படுவதாக அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. “நிர்வாகிகளின் எதிர்கால நலன் கருதி” எடுக்கப்பட்ட முடிவாக இது கூறப்பட்டாலும், இதன் பின்னால் ஆழமான அரசியல் காரணங்கள் உள்ளன. கட்சித் தலைமைக்கும் மாவட்டத் தலைமைக்கும் இடையிலான இடைவெளி, மற்ற பெரிய கட்சிகளுடன் இணைய நிர்வாகிகள் எடுக்கும் முயற்சி என இது பல கோணங்களில் பார்க்கப்படுகிறது.

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அமமுக ஒரு கணிசமான வாக்கு வங்கி’யைக் கொண்டிருந்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதில் அமமுக முக்கியப் பங்கு வகித்தது. 2019 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், கூட்டணி பலம் இல்லாததால் பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை.

2021 -ல் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இது தொண்டர்கள், கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோர்வை ஏற்படுத்தியது. தற்போது அதிமுகவில் நிலவும் ஒற்றைத் தலைமைப் பிரச்சினை, பாஜகவின் நகர்வுகள் ஆகியவற்றுக்கு இடையே அமமுகவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது.


ராமநாதபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகளின் இந்த முடிவு, தமிழக அரசியலில் ஒரு கட்சியின் செல்வாக்கு சரிவதை படம்போட்டு காட்டுகிறது. டி.டி.வி. தினகரன் தனது உத்திகளை மாற்றாதவரை, இப்படி ‘கூண்டோடு கலைப்புகள்’ தொடரவே வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் வென்ற மன்னார்குடி எம்.எல்.ஏ எஸ்.காமராஜ், தவெகவுக்கு ஆதரவாக இருப்பதால் அவரையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் டி.டி.வி.தினகரன்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago