Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பொருளாதார ரீதியாக வசதியாக இருக்கும் மனைவிகள், பெண் என்ற காரணத்திற்காக மட்டுமே கணவரிடமிருந்து ஜீவனாம்சம் (Maintenance) கோர முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த அதிரடி உத்தரவு கணவருக்கு பெரும் நிம்மதியையும், மனைவிக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

2024-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்து வாழத் தொடங்கினர். பின்னர் பிரிந்த மனைவி, தன்னை பராமரிக்க ஜீவனாம்சம் கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம், கணவர் தனது மனைவிக்கு மாதம் ₹20,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி சிலக்கூரு சுமலதா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, கணவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள் பின்வருமாறு:

கணவரின் மாதச் சம்பளம் சுமார் ₹60,000 மட்டுமே எனவும், ஆனால் மனைவி மாதம் சுமார் ₹1 லட்சத்திற்கும் மேல் சம்பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், மனைவி தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் அளவுக்கு பொருளாதார ரீதியாக வசதியாக உள்ளார் என்றும், அதனால் ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

இருதரப்பினரின் நிதிநிலையை விரிவாக ஆய்வு செய்த நீதிபதிகள், குடும்ப நீதிமன்றம் வழங்கிய ஜீவனாம்ச உத்தரவை முழுமையாக ரத்து செய்தனர்.

மேலும் நீதிமன்றம் பின்வரும் முக்கியக் கருத்துகளைத் தெரிவித்தது:

வெறும் பாலினத்தை (பெண் என்ற காரணத்தை) மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஜீவனாம்சம் கோர முடியாது.

ஜீவனாம்சம் வழங்கும் முன், கணவர் மற்றும் மனைவி இருவரின் உண்மையான நிதிநிலையை நீதிமன்றங்கள் கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும்.

மனைவி தன்னைத் தானே பராமரிக்கக்கூடிய பொருளாதார நிலைமையில் இருந்தால், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோருவது நியாயமற்றது.

தங்களை பராமரிக்க வேறு வழியில்லாத பெண்களுக்கு மட்டுமே ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago