https://republictn.com/

பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லா மற்றும் அவரது பச்சிளம் குழந்தைகள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளைப் பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருச்சி சூர்யா சிவாவை சென்னை தெற்கு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாஜக பெண் நிர்வாகியான அலிசா அப்துல்லா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், திருச்சி சூர்யா சிவா மற்றும் யூடியூபர் முக்தார் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரையும், பச்சிளம் குழந்தைகளையும் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும் ஆபாசமாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சென்னை தெற்கு சைபர் கிரைம் போலீசார், இன்று (ஜூன் 4, 2026) திருச்சி சூர்யா சிவாவை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான யூடியூபர் முக்தார் தற்போது தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை கைது செய்வதற்காக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago