Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்தும் அவதூறாகப் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில், கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் சவுக்கு சங்கர் கோயம்புத்தூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையரின் பரிந்துரையின் பேரில், சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் எனக் கூறி அவர் மீது ‘குண்டர் சட்டம்’ பாய்ந்தது.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை முறையான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், போதிய ஆதாரங்களின்றி அவசரக்கோலத்தில் எடுக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியது. மேலும், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் மீறப்பட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படியுங்க  "போலி என்கவுண்டர் முதல் IPS அருணின் மொத்த ஜாதகத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைத்த சவுக்கு சங்கர்! அதிரும் காக்கித்துறை!

நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள், அட்வைசரி போர்டு பரிசீலனைக்குப் பிறகு, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாகத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும், சவுக்கு சங்கர் மீது இன்னும் பல வழக்கமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் முழுமையாக விடுதலையாவதில் சில சட்டச் சிக்கல்கள் நீடிக்கின்றன. அரசின் இந்த ரத்து உத்தரவு சவுக்கு சங்கர் தரப்பிற்கு ஒரு மிகப்பெரிய தற்காலிக ஆறுதலாகவும், அரசியல் ரீதியாக ஒரு முக்கிய திருப்பமாகவும் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago