தவெக கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், தனது செயல்பாடுகள், பேச்சுகளால் சமீப காலமாக விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருகிறார். கவுண்டம்பாளையம் தொகுதியின் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை கனிமொழி தனது சொந்த அலுவலகத்தில் நடத்தினார். அந்த ஆலோசனையின் போது எம்.எல்.ஏ கனிமொழி ஒரு பெரிய சோஃபாவில் அமர்ந்திருக்க, அரசு அதிகாரிகள் அவருக்கு எதிரே சாதாரண நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகின. “சமத்துவம் பேசும் தவெகவின் எம்.எல்.ஏ-வே அதிகாரிகளை disrespect செய்கிறார்” என்றும், அரசு அதிகாரிகளை ஜோதிட/சொந்த அலுவலகத்திற்கு வரவழைத்து ஆய்வு செய்தது தவறு என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

எனது தொகுதி அலுவலகப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக பழைய அலுவலகத்தில் சந்தித்தேன்; அங்கு இருந்த இருக்கைகளிலேயே அமர்ந்தோம். யாரையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். தனது பெயர், பிரமாணப் பத்திரங்களில் ‘Dr. கனிமொழி சந்தோஷ்’ எனக் குறிப்பிட்டிருந்தது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இவர் மருத்துவப் படிப்பு படிக்காமல் ‘டாக்டர்’ பட்டத்தைப் பயன்படுத்துவதாகவும், அது போலிப் பட்டம் என்றும் இணையத்தில் சிலர் கேள்வி எழுப்பினர். தான் பி.ஏ., பி.எல் முடித்த வழக்கறிஞர் என்றும், ஜோதிடத் துறையில் உள்ள ஆர்வத்தால் சர்வதேச அமைப்பின் மூலம் முனைவர் பட்டம் பெற்றதாகவும் தெரிவித்தார். மக்கள் தம்மைக் குறிப்பிடும்போது இயல்பாக ‘டாக்டர்’ என்று அழைப்பது வழக்கம் ஆகிவிட்டது எனக் கூறினார்.
சட்டமன்றத்திலும், வெளிக்கூட்டங்களிலும் தொகுதி நிர்வாகம், எதிர்கட்சிகளின் அரசியல் போக்கு குறித்துப் பேசும்போது, அதிகாரவர்க்கத்தினரின் “பண்ணையார் மனநிலை” மாற வேண்டும் என அவர் பேசிய கருத்துகள் காரசாரமான விவாதப் பொருளாகின.
2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்றும், ராகுல் காந்தியே அவரை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என்றும் கூறிப் பெரும் விவாதத்தைக் கிளப்பினார். இதற்குக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இ ந்நிலையில் கனிமொழி சந்தோஷின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளது ஒரு கும்பல். இதனால் கடுப்பான பலரும், ”பிடிஆர் நீங்க எப்பிடி உருவாக்கின it wing எப்பிடி கிழ்த்தராம கொண்டு வந்து விட்டுட்டாங்க பாருங்க. கனிமொழி அக்கா.. இது தான் பெரியாரிசம்னு சொல்லப் போறீங்களா? இல்லை இவன் மீது ஆக்சன் எடுக்க போறீங்களா? பெண் எம்.எல்.ஏ-வுக்கே, இந்த நிலை என்றால் இந்த சிங்கப்படை எதற்கு..?
ஒரு மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்களுக்கு என்னவாகும்? யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பலரும் குமுற, அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.
