Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ராஜீவ், செய்தியாளர்களை சந்தித்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பெயரையே மறந்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜீவ், முதலில் தனது துறையின் பெயரை குறிப்பிடுவதில் தடுமாறினார். “சுற்றுச்சூழல் துறை” என்பதற்குப் பதிலாக “சுற்றுலாத்துறை” என்று தவறாக கூறிய அவர், பின்னர் தடுமாறியபடி மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேசி சமாளிக்க முயன்றார்.

அப்போது, “தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் எனக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கியுள்ளார். என்மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை கொடுத்துள்ளார்” என்று கூறிய அவர், தொடர்ந்து மீண்டும் “சுற்றுலாத்துறை” என குறிப்பிட்டது அங்கு இருந்தவர்களிடையே சிரிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க  "திமுக கூட்டத்தில் 'த்ரிஷா' முழக்கம்: உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சர்ச்சை பதில்… வெடித்தது புதிய அரசியல் மோதல்!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago