https://republictn.com/

தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பத்தரை லட்சம் கோடி ரூபாய் எடுத்துவிட்டு கழுவிவிட்டு போய்விட்டார்கள் என்று போகிற போக்கில் புழுதிவாரி தூற்றுவது சரியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பி, உள்நோக்கத்துடன் திமுகவுக்கு எதிராக ஒரு மாயபிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்களா என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மாயபிம்பத்தை கட்டமைக்க முயற்சிப்பது விஷத்தன்மை கொண்டது மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கதும் ஆகும்” என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டி பேசுவது முதிர்ச்சியின்மையை காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், நிதித்துறை செயலாளர் செங்கோட்டையன், அமைச்சரின் கற்பனை குதிரைக்கு கடிவாளம் போடுவாரா? என்றும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago