கோவை தொண்டாமுத்தூர் அருகே காதலித்து வந்த பெண்ணின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் பாட்டில் குண்டு வீசிய சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணின் வீட்டில், சிலர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளில், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் முன்பகுதியில் பாட்டில்களை வீசி விட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.
காதல் விவகாரம் தொடர்பான பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
