Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நடிகை திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து விமர்சிப்பது முற்றிலும் தவறு என்று பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி, கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெற்றோருக்கு அருகில் முன்வரிசையில் நடிகை திரிஷா அமர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து, திரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன.

Republic Tamil

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சனா கல்ராணி, “முதலமைச்சர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள், திட்டங்கள் அல்லது அவரது நிர்வாகத்தில் குறைகள் இருந்தால் அதை தைரியமாக விமர்சியுங்கள். அதை விட்டுவிட்டு எதற்காக ஒரு பெண்ணை இதில் இழுத்து குறிவைக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவரது சொந்த விருப்பம் என்றும், அவர்கள் நண்பர்களாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ இருந்தாலும், அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திரிஷா தனது சொந்த உழைப்பால் திரையுலகில் உயர்ந்துள்ள வெற்றிகரமான நடிகை என்றும், அவருக்குக் கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை அனைவரும் வழங்க வேண்டும் என்றும் சஞ்சனா கல்ராணி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க  "என் அப்பாவா இது?" 'ஹபீபி' படத்தை பார்த்து மிரண்டு போன தனுஷ்!

விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவதூறு பரப்ப முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், சஞ்சனா கல்ராணி திரிஷாவுக்கு ஆதரவாகப் பேசியதுடன், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளார். விஜய் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கக் காசுகள் வழங்கும் திட்டம், கிராமப்புறங்களில் தண்ணீர் தொட்டி பழுதுகளைச் சரிசெய்தல், சாலை வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விஜய்யின் சமூக வலைதளக் குழுவினர் இரவு நேரங்களிலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் அடிப்படையில் விஜய்யை “மிகவும் திறமையான முதலமைச்சர்களில் ஒருவர்” என்றும் சஞ்சனா கல்ராணி பாராட்டியுள்ளார்.

இதற்கிடையே, திரிஷாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், “ஒரு நடிகை” என்று குறிப்பிட்டு, நாட்டின் சுதந்திர தின விழாவில் அவரை முன்வரிசையில் அமர வைத்து, இருவரும் ஒருவருக்கொருவர் சல்யூட் செய்துகொண்டது கண்ணியமற்ற செயல் என்று சிலர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதையும் படியுங்க  ’அப்படியேதான் இருக்காரு…’ முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து சினேகா பகிர்ந்த எமோஷனல் பதிவு!"
Republic Tamil

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, “அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியாதவர்கள், ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்” என்று சஞ்சனா கல்ராணி கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறிய நிலையில், நடிகை திரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்த வயதில் தேவையில்லாத நாடகங்கள் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. போய் பணம் சம்பாதிப்பதற்கான வழியைப் பார்த்துவிட்டு நிம்மதியாக இருங்கள்” என்ற வாசகத்தை அவர் மறுபதிவு செய்திருந்தார். இந்தப் பதிவு, தன்னைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு திரிஷா கொடுத்த பதிலடி என்று அவரது ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

இதனிடையே, விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த விவாகரத்து மனுவை சமீபத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், இதையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Republic Tamil

இதற்கு முன்னதாக, விஜய்யின் பதவியேற்பு விழா மற்றும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் திரிஷா கலந்துகொண்டதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

இதையும் படியுங்க  அதிமுக-வை சல்லி சல்லியாக உடைத்த அந்த தொழில் அதிபர்..! அடுத்த டார்க்கெட் தவெக..! அமித் ஷா ஆதரவில் ஆட்டம்..?

சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சர் விஜய் ஜீப்பில் சென்றபடி அணிவகுப்பை பார்வையிட்டபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த திரிஷா எழுந்து நின்று அவருக்கு சல்யூட் செய்தார். பதிலுக்கு முதலமைச்சர் விஜய்யும் திரிஷாவுக்கு சல்யூட் செய்தார். இந்தக் காட்சிகள் இடம்பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து, அரசு விழாக்களில் பின்பற்றப்படும் நெறிமுறைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அரசு சார்பில் நடைபெறும் அதிகாரப்பூர்வ விழாக்களில் முன்வரிசையில் யார் அமர வேண்டும் என்பதற்கான கடுமையான அரசு நெறிமுறைகள் உள்ள நிலையில், திரிஷாவுக்கு எவ்வாறு முன்வரிசையில் இடம் வழங்கப்பட்டது என்பதும் தற்போது அரசியல் ரீதியாக விவாதிக்கப்படும் முக்கியப் பிரச்சினையாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதற்குப் பதிலாக, அரசு விழாவின் நடைமுறைகள் மற்றும் அரசியல் ரீதியான செயல்பாடுகள் குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும் என்பதே சஞ்சனா கல்ராணியின் கருத்தாக உள்ளது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் விமர்சனத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago