Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சமீபத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பு ஒன்றில், நடிகை ஜோதிகாவிடம் அவரது கருத்துகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, சிலர் அவரது கருத்துகளுக்கு பின்னால் பணம் பெற்றுக்கொண்டு பேசுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதற்கு நடிகை ஜோதிகா தனது தனித்துவமான பாணியில் நேரடியாகவும், தைரியமாகவும் பதிலளித்துள்ளார்.

நீட் (NEET) தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ஜோதிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், கல்வி முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். மாணவர்களாகிய எங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம். சோனம் வாங்சுக், அபிஷேக் கே. சௌரதாஸ் போன்றவர்களைப் போல எங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம். வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் Gen Z தலைமுறையை நினைத்து பெருமைப்படுகிறேன். ‘நாங்கள் இந்தியா’ என்பதை நீங்கள் ஒன்றிணைந்து நிரூபித்துள்ளீர்கள். எங்களை அச்சமற்றவர்களாக மாற்றிய CJP அமைப்புக்கு நன்றி.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்க  "அமைச்சர் விலகினால் ஆட்சி வீழாது!" – நீட் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு அன்னா ஹசாரேவின்  கடிதம்!

ஜோதிகாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றதுடன், பலரும் அவரது தைரியமான கருத்தை பாராட்டினர். அதே நேரத்தில், சிலர் அவரது கருத்துகளுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு ஜோதிகா தொடர்ந்து பதிலளித்து வருகிறார்.

ஒரு சமூக வலைதளப் பயனர்,

“பணம் கொடுத்து ஜோதிகாவை பேச வைத்ததற்கு நன்றி” என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஜோதிகா,

“நீங்கள் எதிர்க்கட்சியிடம் பணம் வாங்கிவிட்டீர்கள் என்று நாங்கள் சொல்லலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மற்றொரு நெட்டிசன், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது சரிதான் என்றும், ஆனால் போராட்டங்களின் போது அரசு சொத்துகள் சேதப்படுத்தப்படுவதாகவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஜோதிகா,

“மாணவர்களின் உடல் மற்றும் தலை மீது அரசு நடத்தும் தாக்குதல்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”

என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு நபர்,

“மேடம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு சென்றுவிடுவீர்கள். ஆனால் இங்கு சூர்யாவின் நிலை என்ன?”

இதையும் படியுங்க  தலைமுறை கடந்த காந்த இசை... 83-லும் குறையாத கம்பீரம்! இசைஞானி இளையராஜா!

என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜோதிகா,

“நான் எங்கே போய்விடுவேன்? இந்தியாவில் தான் இருக்கிறேன். நானும் படங்களில் நடிக்கும் நடிகை என்பதை மறந்துவிடாதீர்கள்.” என்று பதிலளித்துள்ளார்.

நடிகை ஜோதிகாவின் இந்த பதில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவரது ஆதரவாளர்கள் இதை துணிச்சலான பதில் என்று பாராட்டி வரும் நிலையில், எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நீட் தேர்வு விவகாரம், மாணவர் போராட்டம் மற்றும் கல்வி சீர்திருத்தம் தொடர்பான விவாதங்கள் தீவிரமாகி வரும் நிலையில், ஜோதிகாவின் கருத்துகளும் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago