https://republictn.com/

புதிய பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை, மாணவ-மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிலையங்களிலேயே புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதுவரை, பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையில் அரசு பேருந்துகளில் பள்ளிக்குச் சென்று வர கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ-மாணவிகள், தாங்கள் கல்வி பயிலும் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago