இந்தியாவில் ஒரு நபரின் முதல் மற்றும் மிக முக்கியமான அடையாள ஆவணம் பிறப்புச் சான்றிதழ். கல்விச் சேர்க்கை முதல் பாஸ்போர்ட் எடுப்பது வரை அனைத்திற்கும் இது இன்றியமையாதது. முன்பு பிறப்புச் சான்றிதழ் எடுப்பது கடினமான காரியமாக இருந்தது. ஆனால் இப்போது 2026-ல் அரசு கொண்டு வந்துள்ள டிஜிட்டல் மாற்றங்கள் மூலம், எந்த வயதினரும் மிக எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
dc.crsorgi.gov.in போர்டல் மூலம் இந்தப் பணியை எப்படி மேற்கொள்வது என்பது குறித்த விரிவான தகவல்கள் இதோ:
பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை மிகவும் எளிமையானது. முதலில் crsorgi.gov.in இணையதளத்திற்குச் சென்று ‘Sign Up’ செய்ய வேண்டும். உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் கொடுத்து ஒரு கணக்கை உருவாக்கவும்.
பதிவு செய்த பிறகு, உங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் ஐடி (User ID) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும். விண்ணப்பப் படிவம்: “Apply for Birth Certificate” என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களைத் துல்லியமாக நிரப்பவும்.
உங்கள் வயது மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான ஆவணங்களை (Scan copies) பதிவேற்றம் செய்யவும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன் ஒரு ‘விண்ணப்பக் குறிப்பு எண்’ (Reference Number) வழங்கப்படும். இதைக் கொண்டு உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்.
வயதுக்கேற்ப தேவைப்படும் ஆவணங்கள்
பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது வயதைப் பொறுத்து ஆவணங்கள் மாறுபடும். குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பித்தால், மருத்துவமனையில் வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் சீட்டு அல்லது தாய்-சேய் அட்டை மட்டுமே போதுமானது.
பெரியவர்கள் பிறந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணப்பிப்பவர்களுக்கு மூன்று முக்கிய ஆவணங்கள் தேவைப்படும். 10 ரூபாய் முத்திரைத் தாளில் நோட்டரி வழக்கறிஞரிடம் பெறப்பட்ட துணை மாவட்ட ஆட்சியர் ஆணை. பிரமாணப் பத்திரம் (Affidavit) உங்கள் பிறப்பு விவரங்களை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ வாக்குமூலம். ஆதார், பான் கார்டு (PAN) அல்லது பாஸ்போர்ட் (Passport) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.
பாலின வேறுபாடு இல்லை!
பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு நடைமுறைகள் இருப்பதாக ஒரு தவறான புரிதல் நிலவுகிறது. ஆனால், அரசு விதிகளின்படி இருபாலருக்கும் ஒரே மாதிரியான செயல்முறைதான் பின்பற்றப்படுகிறது. ஆவணங்கள் மட்டுமே ஒருவரின் வயதைப் பொறுத்து மாறுபடுகின்றன.
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியால், இன்று அலுவலகங்களுக்கு அலைந்து திரியாமல் வெறும் 10 ரூபாய் செலவில் (முத்திரைத் தாள் கட்டணம் தவிர்த்து) பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும். இந்த ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரின் ஆவணங்களைப் புதுப்பித்துக் கொள்வது எதிர்காலத் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
