Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மின்வாரிய இடைநிலை சேவைகள் இன்று இயங்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், உயரழுத்த மின் நுகர்வோருக்கான பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள அமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சேவையை மேலும் பாதுகாப்பானதும், திறமையானதும் ஆக மாற்றும் நோக்கில், பழைய சர்வரிலிருந்து புதிய மேம்பட்ட சர்வருக்கு தரவுத்தள மாற்றும் பணிகள் நடைபெறவுள்ளன.

இந்த பணிகள் இன்று இரவு 8 மணி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால், அதுவரை மின்வாரிய இடைநிலை சேவைகள் இயங்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago