https://republictn.com/

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு உச்சத்தில் இருந்த பழம்பெரும் நடிகர்கள். அடுத்த தலைமுறையில், விஜய்யும் அஜித்தும் உச்ச இடத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர்.

பின்னர் சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்கள் உருவானாலும், சூர்யா ஒருவரால் மட்டுமே விஜய்- அஜித்துக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்து முன்னணி நட்சத்திர வரிசையில் நுழைய முடிந்தது. அஜித் நட்சத்திரப் புள்ளிவிவரங்களைப் பற்றிக் கவலைப்படாததாலும், விஜய் அரசியலில் நுழைந்ததாலும், கோலிவுட்டின் அடுத்த முன்னணி நட்சத்திரம் யார்? என்பது ஒரு சஸ்பென்ஸாகவே உள்ளது.

இந்நிலையில், அந்த இடம் வெளிப்படையாக சூர்யாவை நோக்கியே நகர்கிறது., அவருடைய லேட்டஸ் ரிலீஸான கருப்பு வெற்றியே அதை வரையறுக்கிறது. கலவையான விமர்சனங்கள், பல தாமதங்களுக்குப் பிறகும், கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்தது. இந்த தோல்வி காலத்தில் சூர்யா இதைச் சாதிக்கும்போது, ​​ஒரு சரியான மசாலாப் படம் அவரைத் தமிழ் சினிமாவின் ஸ்டார் என்ற நிலைக்குத் தானாகவே உயர்த்திவிடும்.

எப்படியிருந்தாலும், ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்கள் முற்றிலும் வேறு ஒரு தளத்தில் போட்டியிடுவார்கள், அவர்களை இந்தப் போட்டிக்குக் கொண்டு வர முடியாது. தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் போன்ற நடிகர்களுக்கும் திறமை இருக்கிறது. ஆனால் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த பாக்ஸ் ஆபிஸ் ஆட்டத்தில் அவர்கள் ஏற்ற இறக்கங்களோடு இருக்கிறார்கள். ஏனெந்றால் அது அவர்களின் மார்க்கெட் மதிப்பிலும் பிரதிபலிக்கிறது. தோல்விகள் இருந்தபோதும், சூர்யாவின் மாறாமல் அப்படியே இருக்கிறது.

சூர்யா முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமானால், அவர் தனது கதைத் தேர்வுகளை மாற்ற வேண்டும். அந்த நிலையை அடைய சூர்யா தனது ஸ்டோரி செலக்சனை மாற்ற வேண்டும். சூர்யா தான் தேர்ந்தெடுக்கும் விஷயங்களில் தைரியமாக இருக்க வேண்டும். முடிந்தால் அரசை விமர்சிக்கும் நிலைப்பாடு எடுக்கவும் கூடியவராக இருக்க வேண்டும்.

சர்கார், மெர்சல், மாஸ்டர், கைதி, ஜன நாயகன் போன்ற படங்களில் விஜய் இதையே செய்திருக்கிறார். சூர்யா, தன்னை விரும்பாத ரசிகர்களிடம்கூட ஒரு வலுவான ஆதரவுத் தளத்தைப் பெற, துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சூர்யா சுயபரிசோதனை செய்து, தான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள இதுவே சரியான நேரம். அடுத்து, சூர்யாவின் முதல் தெலுங்கு, தமிழ் இருமொழிப் படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெளியாகிறது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் அவருக்கு வெற்றி தருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago