Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டவரும் காவல் துறையினரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சராக இருந்தபோது அந்த காலகட்டங்களில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்புகொடுக்கப்பட்டிருந்தது. அப்போது தமிழ்நாடு செக்யூரிட்டி பிராஞ்சில் இருந்து காவல் துறையினர் கருப்பு சீருடை அணிந்திருக்கும் தனி பாதுகாவலர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தார்கள். முதலமைச்சராக பொறுப்பில் இருந்து அவர் விலகியதற்கு பிறகு புதிய அரசு அமைந்ததுக்கு பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட இஸ்ட் பிளஸ் பாதுகாப்பிநன் காவலர்கள் எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக தலா 12 பேர் பாதுகாப்பு ஈடுபடுவார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது

அதன் அடிப்படையில் கடந்த 100 நாட்களாக அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது கொடுக்கப்பட்டு அந்த இஸட் பிளஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்படுவதாகவும், மாற்றாக அவருக்கு ஆயுதப்படை பிரிவை சார்ந்த ஒன்பது பாதுகாப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில இனி ஈடுபடுவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த இஸ்ட் பிளஸ் பாதுகாப்பை முழுமையாக தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றிருக்கிறது.

இதையும் படியுங்க  "வெற்றிக்கு பின்னால் 'சூர்யா'… பெருமைக்கு பின்னால் 'விஜய்'… ஆர்.ஜே.பாலாஜிக்கு நெட்டிசன்கள் கண்டனம்!"

ஸ்டாலினுக்கு இனி கருப்புநிற உடையில் தனி பாதுகாவலர்கள் இருக்க மாட்டார்கள் எனவும் சாதாரண காக்கி சீருடையில் இருக்கக்கூடிய காவலர்களே பாதுகாப்பு வழங்குவார்கள் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago