Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தில் போக்குவரத்து சோதனையின் போது பைக்கின் சாவியைப் பறிமுதல் செய்த போலீசாரைப் பழிவாங்குவதற்காக, சாட்ஜிபிடி (ChatGPT) தொழில்நுட்ப உதவியுடன் பெட்ரோல் குண்டு தயாரிக்கக் கற்றுக்கொண்டு, அதனை காவல் நிலையத்தின் மீதே வீசிய திருநெல்வேலி மாவட்டப் பதின்ம வயது சிறுவர்களின் விபரீத செயல் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் பகுதியில் ஒரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் மூன்று பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்த 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தி, விதிமீறலுக்காக அவர்களின் பைக் சாவியைப் பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த அச்சிறுவர்கள், உடனடியாக இணையதளம் மற்றும் சாட்ஜிபிடி ஏஐ (AI) செயலியில் ‘பெட்ரோல் குண்டு தயாரிப்பது எப்படி?’ என்று தேடிக் கற்றுக்கொண்டு, காவல் நிலையத்தின் மீதே குண்டு வீசி தங்களின் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவீனத் தொழில்நுட்பங்களை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தாமல், பழிவாங்கும் அராஜகச் செயல்களுக்குப் பயன்படுத்தும் ‘ஜென் ஜி’ (Gen Z) எனப்படும் இந்தத் தலைமுறையினரின் அசுரப் போக்கு குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று சிறுவர்களையும் தடுத்துக் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Jan 12, 2020 at 4:28 pm