ரஷ்யா – உக்ரைன் போரால் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்திருந்த சிறுமி, நான்கு ஆண்டுகள் நீடித்த தீவிரத் தேடலுக்குப் பிறகு மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைந்த நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான போரின் காரணமாக, அந்தச் சிறுமி நீண்ட காலமாக தனது குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
சுமார் நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர் தேடுதல்களின் பின்னர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் அந்தச் சிறுமி மீட்கப்பட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரைக் கண்டதும், அந்தச் சிறுமி அவர்களிடம் ஓடிச் சென்று கட்டிப்பிடித்து கதறி அழுதார். குடும்பத்தினரும் கண்ணீருடன் அவரை அரவணைத்துக் கொண்டனர்.
இந்த உருக்கமான குடும்ப மறுஇணைவு காட்சிகள் அடங்கிய வீடியோ, உலகம் முழுவதும் உள்ள இணையவாசிகளின் இதயங்களை நெகிழச் செய்து, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
