Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நடிகை சமந்தா தனது உடல்நலப் போராட்டம், சினிமா வாழ்க்கை மற்றும் தற்போதைய மனநிலை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

முந்தைய காலங்களில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள், ஹிட் திரைப்படங்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்களே தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். காலப்போக்கில் தனக்கு கிடைத்த நட்சத்திர அந்தஸ்துக்கும், பிறரின் அங்கீகாரத்திற்கும் தான் அடிமையாகி விட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒரு திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகி அதன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வாறு இருக்கிறது என்பதையே தனது மகிழ்ச்சி மற்றும் மனநிலை தீர்மானிக்கும் அளவிற்கு தாம் மனதளவில் பலவீனமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ‘மயோசிடிஸ்’ என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டபோது தனது உலகமே தலைகீழாக மாறியதாக சமந்தா தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்கள் காரணமாக தனது சினிமா பயணம் முடிந்துவிட்டது என்றும், மீண்டும் கேமரா முன் நிற்பேன் என்று நினைக்கவே இல்லை என்றும் அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க  விஜயைத் தொடர்ந்து தனுஷா? புது கட்சி கேள்விக்கு 'இட்லி கடை' ஸ்டைலில் தனுஷ் கொடுத்த மாஸ் ரியாக்சன்!

ஸ்டெராய்டு மருந்துகளின் பக்கவிளைவுகளால் முகம் வீங்குவது, கண்கள் வறண்டு போவது உள்ளிட்ட கடுமையான உடல் உபாதைகளை தினமும் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோய் தனது அகங்காரத்தை உடைத்து, வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்கக் கற்றுக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய திரையில் தனது படங்கள் வெளியாகாத நிலையிலும், தற்போது தான் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் இருப்பதாக சமந்தா கூறியுள்ளார்.

இனி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து, தனது உடல்நலம் மற்றும் மனநலனுக்கு முன்னுரிமை கொடுத்து, தனக்குப் பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சமந்தா, ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, நடிகையைத் தாண்டி தயாரிப்பாளராகவும் தனது புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

மயோசிடிஸ் நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தபோது, ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடரில் தன்னால் நடிக்க முடியாது என்று நினைத்ததாகவும் சமந்தா கூறியுள்ளார். இதனால், இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோரிடம் தன்னை மாற்றிவிட்டு, கியாரா அத்வானி அல்லது கிருத்தி சனோன் போன்ற நடிகைகளை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "இது மாணவர்கள் போராட்டமே இல்ல.. எல்லாம் அரசியல் நாடகம்!" – மேடையில் மைக் பறிக்கப்பட்டதால் வெடித்த சனம் ஷெட்டி!

ஆனால், நோய் பாதிப்பையும் மீறி அந்தத் தொடரில் நடித்த சமந்தா, பல நாட்களில் காலை மருத்துவமனையில் டிரிப் ஏற்றிக்கொண்டு, மதியத்திற்கு பிறகு ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததாக கூறியுள்ளார். ஒரு ஆக்ஷன் காட்சியின் போது தலையில் பலத்த அடிபட்டு சில நொடிகள் நினைவிழந்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

திரைக்கதைகள் குறித்து பேசிய சமந்தா, ஒரு சாதாரண கதைக்கும் நல்ல கதைக்கும் உள்ள வித்தியாசத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றாலும், ஒரு நல்ல கதை எப்படி ஒரு சிறந்த படைப்பாக மாறுகிறது என்பதை படப்பிடிப்பு தளத்தில் தான் உணர முடியும் என தெரிவித்துள்ளார்.

தான் நடித்த ‘ஈகா’ (நான் ஈ) மற்றும் ‘ரங்கஸ்தலம்’ திரைப்படங்கள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதே அவை மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற விசேஷமான உணர்வு தனக்குக் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சமந்தா தயாரித்து, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆக்ஷன்-டிராமா திரைப்படமான ‘மா இண்டி பங்காரம்’ ஜூன் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்க  "8 ஆண்டு காதல்… 4 ஆண்டு திருமண வாழ்க்கை! 'பிகில்' நடிகை ரெபா மோனிகாவின் வாழ்க்கைக்குள் வந்த குட்டித் தேவதை!

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் ஒரு பாரம்பரிய குடும்பத் தலைவியாகவும், அதே நேரத்தில் புடவை அணிந்தபடி அதிரடி சண்டைக் காட்சிகளில் ஈடுபடும் வலுவான கதாபாத்திரத்திலும் சமந்தா நடித்துள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago