பிரதமர் நரேந்திர மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து நார்வே நாட்டின் “ஆப்டன் போஸ்டன்” நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான நார்வேக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்றிருந்தபோது, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோயர் அவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, நார்வே பத்திரிகையாளர் ஹெல்ங்க கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இது விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரதமர் மோடியை பாம்பாட்டி போல சித்தரித்து நார்வேயின் “ஆப்டன் போஸ்டன்” நாளிதழ் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
