Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Indian Team

மகளிர் ஆசிய கோப்பை 2026-ல் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை பாகிஸ்தான் அணியால் சமாளிக்க முடியவில்லை. ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியிருந்த இந்திய அணி, தங்களது கடைசி குரூப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதன் முடிவும் முந்தைய நான்கு போட்டிகளைப் போலவே இருந்தது. பாகிஸ்தான் அணியை வெறும் 55 ரன்களுக்குள் சுருட்டிய இந்திய அணி, வெறும் 52 பந்துகளில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதன் மூலம், இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளுடன் குரூப் சுற்றை நிறைவு செய்தது.

துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக தனது ஐந்தாவது தொடர்ச்சியான டி20 வெற்றியை இந்திய அணி நோக்கமாகக் கொண்டிருந்தது. மறுபுறம், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான தனது வெற்றி ஒபதிவு செய்தே ஆக வேண்டும் என வேட்கையோடு இருந்தது. அக்டோபர் 2022 முதல் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் நான்கு போட்டிகளிலும் தோற்றிருந்தது. ஆனால், பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணியின் காத்திருப்பு இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில் இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களை ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வெளியேற்றினர்.

இதையும் படியுங்க  பாகிஸ்தானில் ஒரு வீரர்கூட இல்லையா..? ரோஹித்தை கேப்டனாக்கி சொந்த நாட்டிலேயே 'வில்லனான' ஷதாப் கான்..!

டாஸ் வென்ற பிறகு முதலில் பேட் செய்ய பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா எடுத்த முடிவு ஆச்சரியமாக இருந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 27 ரன்கள் தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் வெறும் சம்பிரதாயமாகவே இருந்தனர். ஸ்ரீ சரணி (3/7), தீப்தி ஷர்மா (2/5), பிரேமா ராவத் (3/9), மற்றும் ஷெஃபாலி வர்மா (1/10) ஆகியோரை உள்ளடக்கிய இந்திய சுழற்பந்து வீச்சு, பாகிஸ்தானை வெறும் 55 ரன்களுக்குள் சுருட்டியது. அதாவது, 27 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான், அடுத்த ஒன்பது விக்கெட்டுகளை வெறும் 28 ரன்களுக்குள் இழந்தது. இது டி20 போட்டிகளில் பாகிஸ்தானின் மிகக் குறைந்த மொத்த ரன்கள் ஆகும்.

இப்போது பந்துவீச்சாளர்கள் போட்டியின் முடிவை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டனர். பேட்ஸ்மேன்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்பதைப் பார்ப்பது மட்டுமே எஞ்சியிருந்தது. ஷெஃபாலி வர்மா முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரை அடித்து, இலக்கை விரைவாக எட்டும் தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா தனது பந்துவீச்சுத் திறமையைக் காட்டினார். இரண்டு ஓவர்களுக்குள் ஷெஃபாலி, பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, அவர் இந்தியாவைச் சற்று சிக்கலில் ஆழ்த்தினார். இருப்பினும், இந்திய அணியின் அனுபவமிக்க கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (18) மற்றும் தீப்தி ஷர்மா (12) ஆகியோர் இணைந்து 8.4 ஓவர்களில் வெற்றியை உறுதி செய்தனர்.

இதையும் படியுங்க  பயங்கரவாதத் தொழிற்சாலை பாகிஸ்தான் – ஐநா சபையில் அம்பலப்படுத்திய இந்தியா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 seconds ago at 22 seconds ago